வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்...
Chennai Book Fair: எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாச்சலபதி பரிந்துரைக்கும் `5' புத்தகங்கள்!
நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், அரங்குகள் நிறையும் வாசகர் கூட்டம் என, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சி, பரபரத்துக் கொண்டிருக்கிறது.
முக்கியமாக இந்தக் கண்காட்சி, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கும் மேடையாக அமைந்துள்ளது.
காலச்சுவடு அரங்கில் புத்தகங்களோடு காணப்பட்ட ஆய்வாளரும், எழுத்தாளருமான ஆ.இரா.வெங்கடாச்சலபதியிடம், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி குறித்துக் கேட்டோம்.
நம்மிடம் பேசியவர்,
“புத்தகக் கண்காட்சி என்பது புத்தகங்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கானது. அங்கே புத்தக வாசிப்பு குறித்தே பேச வேண்டும். வாசகர்–எழுத்தாளர் உரையாடல்களே நடக்க வேண்டும்.

ஆனால் அதைத் தவிர, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கே நடத்தப்படுகின்றன. அவை வாசகர்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றன. அந்த சத்தமும், இரைச்சலும் வாசிப்பைப் பாதிக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.
சில புத்தகங்களை வெளியிடுவதற்கே சிரமம் ஏற்படுகிறது. அரசியல் வேண்டாம் என்று கூறுகின்றனர். அரசு அனுமதித்த எந்த புத்தகத்தையும் இங்கு வெளியிடவும், விற்கவும் உரிமை இருக்க வேண்டும். அதற்கு இடைஞ்சல் தரக் கூடாது. புத்தகங்களுக்கான ஒரு ‘free space’ ஆக இந்த இடம் இருக்க வேண்டும்.
நான் டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்றுள்ளேன். அங்கெல்லாம் இப்படி இரைச்சல் இல்லை. இதை பபாசி நிர்வாகம் கவனிக்க வேண்டும். மற்றபடி, கண்காட்சி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது” என்றார்.
அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களாக அவர் குறிப்பிட்டவை:
காதலின் குறுவாள் – மீரா கவிதைகள் – தமிழில்: செங்கதிர், நூல் வனம் பதிப்பகம்
ருசிபேதம் – ஷான் நவாஸ், யாவரும் பதிப்பகம்
பாரதியின் தராசு – ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம்
சோழ அரசும் சமூகமும் – எ. சுப்பராயலு, காலச்சுவடு பதிப்பகம்
கைவல்ய சுவாமியார் கட்டுரைகள் – கைவல்ய சுவாமியார், விடியல் பதிப்பகம்
(இது ஆராய்ச்சியாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என அவர் குறிப்பிட்டார்)
















