செய்திகள் :

CSK vs DC: "எங்களிடம் பந்துவீச்சில் மிரட்டும் வீரர்கள் இல்லை; அதனால்..." - வெற்றி குறித்து ருதுராஜ்

post image

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 11) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

தொடர் சரிவுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ், மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

ருதுராஜ்
ருதுராஜ்

வெற்றி குறித்து ருதுராஜ் பேசியவை: "கடைசியாக ஒரு வெற்றியைப் பதிவு செய்தது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இன்று ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும் மிகச்சிறப்பாக இருந்தது.

இந்தத் தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் போதெல்லாம் நாங்கள் ரன்களைக் குவிப்பதில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம், இன்றும் அதற்கான நல்ல அறிகுறிகள் தெரிந்தன.

குறிப்பாக, சஞ்சு சாம்சன் களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சைச் சிதறடித்த விதம் அருமை; அவர் ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடினார்.

எங்களது பந்துவீச்சு முயற்சியைப் பார்த்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். வெளிப்படையாகச் சொல்லப்போனால், எங்களிடம் பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் 'எக்ஸ்-ஃபேக்டர்' (X-factor) வீரர்கள் யாரும் இல்லை. அதனால், பந்துகளைச் சரியான லென்த்தில் வீசுவதிலேயே நாங்கள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறோம்.

Samson
Samson

கடந்த சில போட்டிகளில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் எங்களுக்கு வெற்றியைப் பறித்தன, ஆனால் இன்று பந்துவீச்சாளர்கள் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினர்.

சென்னையில் விளையாடுவதே தனி சுகம்தான். முடிவு எதுவாக இருந்தாலும் சென்னை ரசிகர்கள் எப்போதும் எங்களுக்குப் பின்னால் இருப்பார்கள். கிரிக்கெட்டை ரசிக்கும் அழகான மனிதர்கள் அவர்கள்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

'முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள்; ஐ.பி.எல் வரலாற்றிலேயே நிகழாத சம்பவம்!' - யார் இந்த பிரபுல் ஹிங்கே?

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அறிமுக வீரர் பிரபுல் ஹிங்கே வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்Praful Hingeராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போ... மேலும் பார்க்க

'அடிச்ச அடி அப்படி.!' - வான்கடேவிலேயே மும்பையை சம்பவம் செய்த ஆர்.சி.பி!

வான்கடேவில் வைத்தே மும்பை அணி மீது அதிரடி தாக்குதலை நடத்தி வென்றிருக்கிறது பெங்களூரு அணி.MI vs RCB``எல்லாப் போட்டியும் போட்டியல்ல ஐபிஎல் ரசிகர்களுக்கு ரோ-கோ மோதிக் கொள்ளும் போட்டியே போட்டி"னு புது திர... மேலும் பார்க்க

CSK vs DC : 'கால் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு கபிகபி! - சேப்பாக்கத்தில் எப்படி வென்றது சி.எஸ்.கே

நீண்ட காலம் கழித்து சி.எஸ்.கே ரசிகர்களின் வாழ்க்கையில் ஒரு கபிகபி நடந்திருக்கிறது. 'இதையெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சுல்ல...' என்பது போல ஆர்ப்பரிப்பில் துள்ளிக் குதிக்கின்றனர் சேப்பாக்கத்தில் குழும... மேலும் பார்க்க

'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' - எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?

சேப்பாக்கத்தில் நடந்து வரும் டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தலான சதம் ஒன்றை அடித்திருக்கிறார்.Samsonசென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக ஆடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோ... மேலும் பார்க்க

'ஒரே ஒருத்தன்.!' - மாஸ் காட்டிய சூர்யவன்ஷி; ஆர்.சி.பி-யின் முதல் தோல்வி

ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல் 10)நடைபெற்ற பெங்களூரு vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணிகளாக இந்த இரண்டு அணிகளும் களம் இற... மேலும் பார்க்க