ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திம...
CSK Vs MI: "தவறுகள் நடக்கும்; ஆனால் ரசிகர்களுக்காகவும், CSK ஜெர்ஸிக்காகவும்..." - கேப்டன் ருதுராஜ்
ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தப் போட்டியில் 48 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் எடுத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ், "இந்தப் போட்டியை நாங்கள் நல்ல முறையில் ஆரம்பித்தோம். அதனால் கிடைத்த உத்வேகத்தைத் தொடர்ந்து முன்னேறி கொண்டு சென்றோம்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்போதும் சொல்வது போல, நான் நல்ல ஃபார்மிலும் தன்னம்பிக்கையுடனுமே இருந்தேன்.
டி20 கிரிக்கெட்டில் சில நாள்கள் இப்படித்தான் நடக்கும், நீங்கள் ஒரு நல்ல ஷாட் அடிப்பீர்கள், அது நேராக ஃபீல்டர் கைக்கே செல்லும். சில நேரங்களில் அதே ஷாட் சிக்ஸராகவோ பவுண்டரியாகவோ மாறும்.
நான் மனதளவில் தெளிவாக இருக்கிறேன் இதற்கு என் மனைவி, சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை எப்போதும் பாஸிட்டிவாக வைத்துக்கொள்கிறார்கள்.

வீரர்கள் அனைவரும் திட்டங்களை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறுகள் நிச்சயம் நடக்கும். ஆனால் ரசிகர்களுக்காகவும், இந்தச் சிஎஸ்கே ஜெர்ஸிக்காகவும் நாம் அனைத்தையும் கொடுக்க வேண்டும்" என்று கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

















