செய்திகள் :

Doctor Vikatan: இதயத்துக்கு ஸ்டென்ட் ஓகே, கிட்னிக்கும் ஸ்டென்ட் வைக்கப்படும் என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: பொதுவாக, இதயப் பிரச்சனைகளுக்காக ஸ்டென்ட் வைப்பதைப் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சிறுநீரகப் (கிட்னி) பிரச்சனைகளுக்காகவும் ஸ்டென்ட் வைக்க முடியுமா? எனது நண்பர் ஒருவர் அவருடைய உறவினருக்குக் கிட்னி ஸ்டென்ட் வைத்ததாகக் கூறினார். கிட்னி ஸ்டென்ட் என்றால் என்ன? இது யாருக்குத் தேவைப்படும், மற்றும் இது ஏன் வைக்கப்படுகிறது?  

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஆன்டன் உரேஷ்குமார்

சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஆன்டன் உரேஷ்குமார்

ஸ்டென்ட் என்பது சிறுநீரகம், இதயம் என ரத்த நாளங்களில் எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் வைக்கப்படும். கழுத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும், வயிற்றில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும்கூட ஸ்டென்ட் வைப்பார்கள். கிட்னியையும், சிறுநீர்க் குழாயையும், சிறுநீர்ப்பையோடு கனெக்ட் செய்வதுதான் கிட்னியில் பொருத்தப்படுகிற ஸ்டென்ட்டின் நோக்கம். இதை வைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

பொதுவாக, வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் (Diabetic patients), நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் சிறுநீரகத் தொற்று (Infection) ஏற்படும், இதனை மருத்துவ மொழியில் 'பைலோனெப்ரிடிஸ்' (Pyelonephritis) என்று  சொல்வோம். இப்படி இன்பெக்ஷன் (தொற்று) வரும்போது, சிறுநீரகத்தில் இருந்து வரக்கூடிய  சளி போன்ற திரவம் உலர்ந்து போய்  அடைத்துக் கொள்ளும். அப்படி அது அடைக்காமல் இருப்பதற்காகத்தான்  ஸ்டென்ட்  போடுகிறோம். இந்த  ஸ்டென்ட், சிறுநீரை (Urine) ஒரு பக்கமாக வழிமாற்றிக் கொண்டே இருக்கும். இதனால் அடைப்பு ஏற்படாது.

நம் உடலில் எங்கு இன்பெக்ஷன் வருமோ அங்கு சளி போன்ற திரவப்படலம் உண்டாகும்.உதாரணத்துக்கு,  நுரையீரலில் இன்பெக்ஷன் ஆகும்போது சளி உண்டாகிறது. அந்தச் சளியை நாம் இருமி, காரித் துப்பிவிடுகிறோம். சில நேரம் அந்தச் சளியே அடைத்துக் கொண்டு, பயங்கரமான, கடுமையான இருமலாக வெளிப்படும். அப்படியும் சளி வெளியே வராமல் இருந்தால், அதற்கு நாம்  ஊசி மற்றும் ஆன்டிபயாடிக்  மருந்துகள் கொடுத்துச் சரி செய்வோம்.

சிறுநீரகத்தைப் பொறுத்தவரை அது உடலின் மிக மிக முக்கியமான உறுப்பு. அதில் இன்பெக்ஷன் காரணமாக அடைப்பு ஏற்பட்டால் 'பேபிலரி நெக்ரோசிஸ்' (Papillary necrosis) என்ற நிலை ஏற்படும்.

ஆனால், சிறுநீரகத்தைப் பொறுத்தவரை அது உடலின் மிக மிக முக்கியமான உறுப்பு. அதில் இன்பெக்ஷன் காரணமாக அடைப்பு ஏற்பட்டால்  'பேபிலரி நெக்ரோசிஸ்' (Papillary necrosis) என்ற நிலை ஏற்படும்.  இன்பெக்ஷன் ஆவதால், எப்படி நுரையீரலில் சளி வருகிறதோ, அதேபோல சிறுநீரகத்திலும் இன்பெக்ஷன் ஆகி சளி (கழிவு) வரும்போது, அது  கட்டியாகி அடைத்துக் கொண்டால், சேகரமாகும் சிறுநீர் உடனுக்குடன் அடைப்பின் காரணமாக உடலிலேயே தங்கிவிடும். இதனால்  தொற்றானது  மேல்நோக்கி ஏறிவிடும். அப்படி  ஏறுவதால்   ரத்தத்தில் நச்சு பரவும் செப்சிஸ் நிலை ஏற்பட்டுவிடும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், கிட்னி இன்பெக்ஷனைக் கண்டறியும்போது நாம்  ஸ்டென்ட்   போடுகிறோம்.

பொதுவாக வயதானவர்களுக்குப் போடக்கூடிய  ஸ்டென்ட்டிற்கு இதுதான் முதன்மைக் காரணம்.  சில சமயம் இளவயதினருக்கும் போடப்படுகிறது. சமீபத்தில் திருமணமானவர்களுக்கு, தாம்பத்ய உறவால் ஏற்படக்கூடிய தொற்றான  'ஹனிமூன் சிஸ்டைடிஸ்' (Honeymoon cystitis)  வரும். அதற்கும்  ஸ்டென்ட் போடுவதுண்டு. மற்றபடி, சிறுநீரக கற்களுக்காக அறுவை சிகிச்சை செய்துவிட்டு  ஸ்டென்ட்   போடுவதுண்டு. புற்றுநோய் ஆபரேஷனுக்குப் பிறகும்  ஸ்டென்ட்   போடுவோம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கூட  ஸ்டென்ட்   போடலாம். பெரும்பாலான ஸ்டென்ட்டுகளை நான்கு மாதங்களில் எடுத்துவிட வேண்டும்.  குறிப்பிட்ட சில மருத்துவக் காரணங்களுக்காக  சில ஸ்டென்ட்டுகளை ஒரு வருடம் வரை கூட வைத்திருக்கலாம்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
 

Doctor Vikatan: சத்தமாகப் பேசும் பிரச்னை... அடுத்தவருக்கு அசௌகர்யம்... தீர்வு உண்டா?

Doctor Vikatan: எனக்கு ஒரு விசித்திரமான பிரச்னை உள்ளது. நான் எப்போது, எங்கு பேசினாலும் மிகவும் சத்தமாகப் பேசுகிறேன். இது பெரும்பாலும் மற்றவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது. நான் விழிப்பு உணர்வோடு... மேலும் பார்க்க

Doctor Vikatan: பாடாகப் படுத்தும் பாதவெடிப்பும், எரிச்சலும்... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: என் வயது 35. எனக்கு சிறு வயதிலிருந்தே பாதவெடிப்பு பிரச்னை இருக்கிறது. திடீரென அதிகமாகும்... வெடிப்புகளில் இருந்து ரத்தம் வரும். ஆயின்மென்ட் போட்டால் ஓரளவு சரியாகும். இந்தப் பிரச்னைக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் மனதில் நெகட்டிவ் எண்ணங்கள்; விரட்டவும் விடுபடவும் தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan:எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அதிலிருந்து விடுபட எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியவில்லை. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் என்ன... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல்சோர்வு, உடல் வலி... வைட்டமின் டி மாத்திரை எடுத்தால் சரியாகுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த ஒரு வருடமாக கடுமையான உடல் வலியும், எப்போதும் உடல் சோர்வும் இருப்பதாக உணர்கிறேன். வைட்டமின் டி பற்றாக்குறைதான் காரணமாக இருக்கும் என்றும், அந்த சப்ளிமென்ட் எடுத்தால் சரியாகி... மேலும் பார்க்க

Doctor Vikatan: புரோட்டீன் டிரிங்க்: வொர்க் அவுட் செய்பவர்கள் மட்டும்தான் குடிக்கவேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய நண்பன் ஒருவன் புரோட்டீன் பவுடர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளைகள் குடிக்கிறான். புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் வொர்க் அவுட் செய்பவர்கள்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.... உடற... மேலும் பார்க்க

ஈரோடு: சர்வதேச யோகா தின விழா; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்! | Photo Album

ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா த... மேலும் பார்க்க