செய்திகள் :

Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைகளுக்கு மாற முடியாதா?

post image

Doctor Vikatan: எனக்கு கடந்த 15 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது ஒரு மாதமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறேன். இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால் அதையேதான் தொடர வேண்டுமா,மீண்டும் மாத்திரைக்கு மாற வாய்ப்பே இல்லையா?

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.

இன்சுலினில் பல வகைகள் உள்ளன. புதிய வகையான இன்சுலின்களும் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, இன்சுலின் மூன்று வகையான நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

முதல் வகை: டைப் 1 நீரிழிவு நோயாளிகள்

இவர்களுக்கு இன்சுலின் சிகிச்சை மட்டுமே பிரதானமானது. இதற்குக் காரணம், இவர்களது கணையத்தில் (Pancreas) இன்சுலினைச் சுரக்கக்கூடிய பீட்டா செல்கள் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும். இவர்களுக்கு இன்சுலினுக்கு பதில் மாத்திரைகளைப் பரிந்துரைக்க முடியாது.

இரண்டாம் வகை: டைப் 2 நீரிழிவு நோயாளிகள்



இவர்கள் சாதாரணமாகப் பரவலாகக் காணப்படும் நீரிழிவு நோயாளிகள். இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) காரணமாக இவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது.

இவர்களுக்கு மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் (Oral Hypoglycemic Agent Failure), ரத்தச் சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் (Euglycemia) கொண்டு வர முடியாத நிலையிலும், வேறு ஏதாவது சிக்கல்கள் (Complications) வரும்போதும் இன்சுலின் தான் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும்.

முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால், இவர்களுக்கு இன்சுலின் அளவைக் குறைத்து, தேவைப்பட்டால் நிறுத்துவதற்கும் வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோயாளிகள்

மூன்றாம் வகை: டைப் 3 நீரிழிவு நோயாளிகள்

அவசர சிகிச்சை தேவைப்படுவோர் (Emergencies). இவர்களுக்கு சிகிச்சை அல்லது அவசரத் தேவைகளுக்காக இன்சுலின் பயன்படுத்தப்படும்.

உதாரணத்துக்கு, அறுவை சிகிச்சை (Surgery), இதயப் பிரச்னைகள் (Heart problem), சிறுநீரகப் பிரச்னைகள் (Kidney problem), விபத்து (Accident), கண்புரை அறுவை சிகிச்சை (Cataract) போன்றவற்றின் போது இன்சுலின் தேவைப்படும்.

இத்தகைய சூழல்களில், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர இன்சுலின் போடப்படுகிறது. இந்த அவசர நிலை (Crisis) சரியானதும், மாத்திரைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

நீரிழிவு நோய்க்குச் சிறந்த சிகிச்சை முறைகளில் ஒன்று இன்சுலின் தான். இன்சுலின் போடுவது என்பது மோசமான நிலைக்கான அடையாளம் கிடையாது. அப்படி நினைப்பது மிகப்பெரிய மனத்தடை.
 இன்சுலின் சிகிச்சை என்பது, நீரிழிவு நோய் மீள்தன்மைக்கு (Diabetes Reversal) பெரிதும் உதவும். மேற்கொண்டு சிக்கல்கள் வராமல் தடுக்க உதவும்.

இன்சுலின் செலுத்திக் கொள்ளும் பெண் (சித்தரிப்பு படம்)


நீரிழிவு நோயாளிகள் அனைவரும் டைப் 1 நோயாளிகளைப் போல நிரந்தரமாக இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எந்த வகையான இன்சுலின், யாருக்கு, எந்த நேரத்தில் போடப்படுகிறது என்பதைப் பற்றி உங்களுடைய சர்க்கரை நோய் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

`நாகரிகத்துக்காக தும்மலை அடக்க வேண்டாம்; உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்!' - எச்சரிக்கும் மருத்துவர்

நிறைய பேர் நாகரிகத்துக்காக தும்மலை அடக்குகிறார்கள். தும்மலை அடக்கலாமா? நவீன மருத்துவம் என்ன சொல்கிறது? டாக்டர் கு. கணேசன் விளக்குகிறார். தும்மல்தும்மல் நல்லது!தும்மல் ஓர் அனிச்சைச் செயல். காற்று தவிர ... மேலும் பார்க்க

Doctor Vikatan: `பீரியட்ஸ் அவதிகள், ஆண்களும் உணர வேண்டும்' - நடிகை ராஷ்மிகாவின் பேச்சு சாத்தியமா?

Doctor Vikatan: பெண்களின் பீரியட்ஸ் அவதிகளை ஆண்களும் அவசியம் உணர வேண்டும் என சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து சொல்லியிருக்கிறார். பீரியட்ஸ் வலியைஉணரவென்றே பிரத்யேக கருவி இருப்பதாகச் சொல்கிறார்... மேலும் பார்க்க

``அந்த மசாலா கடவுளின் அமிர்தம் தான்'' - சித்த மருத்துவர் சிவராமன்

நம் வீட்டு சமையலறைகளில் மணக்கும் பெருங்காயத்தின் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். பெருங்காயம்பிசாசு மலமா; கடவுளின் அமிர்தமா?‘காலிப் பெருங்காய டப்பா’ எனத் தோற்றுப்போனவர்களைச் ச... மேலும் பார்க்க

இருமல் மருந்துக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, இருமல் மருந்துகளின் விற்பனையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?

Doctor Vikatan: என் வயது 39. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 6 மாதங்களாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) எடுத்துக்கொள்வது ஒருவரது த... மேலும் பார்க்க

தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? - மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்

மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்ட... மேலும் பார்க்க