செய்திகள் :

Gen Z’s Cockroach Janata Party: இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

post image

இந்திய சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற புதிய நையாண்டி இயக்கம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு நாட்களில் 40,000 உறுப்பினர்களை ஈர்த்த இந்த அமைப்பு, தற்பொழுது 70,000-க்கும் அதிகமான ஆதரவாளர்களுடன் இணையத்தில் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.

தற்போதைய சமூக-அரசியல் சூழலையும் நிர்வாக அமைப்பையும் கடுமையாக விமர்சிக்கும் நோக்கில், இன்றைய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி இயக்கமாக இது உருவெடுத்துள்ளது.

அண்மையில் நீதிமன்ற வழக்கு ஒன்றின் போது, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசிய இளைஞர்கள் 'கரப்பான்பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என விமர்சிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த Gen Z தலைமுறையினர், தங்களை நோக்கி வீசப்பட்ட விமர்சனத்தையே தங்களின் அடையாளமாக மாற்றி இப்படி ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

"வேலையில்லாத மற்றும் சோம்பேறிகளின் குரல்" என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ள இந்த இயக்கத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பலரும் ஆதரவு தந்துள்ளனர்.

அரசியல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்ட இக்கட்சி 5 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, கட்சி மாறினால் 20 ஆண்டுகள் தடை, தலைமை நீதிபதிகள் ஓய்வுக்குப் பின் அரசுப் பதவி பெறத் தடை, ஆளும் தரப்பு ஊடகவியலாளர்களின் சொத்து விசாரணை ஆகியவை இவர்களின் முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன.

மேலும், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கும் தேர்தல் அதிகாரிகள் மீது UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசாங்கத்தின் மீதான இளைஞர்களின் அதிருப்தியே இத்தகைய இயக்கங்கள் உருவாக முதன்மைக் காரணம். தங்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு குறித்த நியாயமான கோரிக்கைகளுக்குப் பதில் கிடைக்காதபோது, அவர்கள் நையாண்டி மற்றும் டிஜிட்டல் ஒற்றுமையைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். உலகளாவிய விழிப்புணர்வு கொண்ட இன்றைய தலைமுறையை, பழைய அரசியல் உத்திகளால் இனி ஏமாற்ற முடியாது.

உ.பி: மாணவி பாலியல் கொடுமை வழக்கு; ஜாமீனில் வந்த குற்றவாளிக்கு மாலை அணிவித்து மரியாதை- பரவும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தை சேர்ந்த சுசில் பிரஜாபதி என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். வழக்கறிஞர் ஒருவ... மேலும் பார்க்க

கர்நாடகா: முகாமில் திடீரென மோதிக்கொண்ட யானைகள்; இடையே சிக்கிய சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சென்னையைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா துபாரே யானைகள் முகாமைச் ச... மேலும் பார்க்க

`நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால்.!' - முதியவரின் விநோத செயல்

சிலர் தங்களது மரணத்திற்கு முன்பே தங்களது கல்லறை எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். ஒரு சிலர் தங்களது கல்லறையை தாங்கள் உயிரோடு இருக்கும்போதே கட்டி வைத்துவிடுவர். ஆனால் மத்திய ... மேலும் பார்க்க

`கொடூரமானது' - கண்ணீர் சிந்திய இந்தியர்: 30 ஆண்டாக வசிக்கும் ஹோட்டல் உரிமையாளரை வெளியேற்றும் ஜப்பான்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சமீப காலமாக கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த மனீஷ் குமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள சைதாமா எ... மேலும் பார்க்க

18 வருட உழைப்பு, ஜப்பானில் பிறந்த குழந்தைகள்... கலங்கும் இந்தியர்! - அரசின் புதிய விதிகளால் சிக்கல்!

பிசினஸ் மேனேஜர்’ விசாஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வந்த மனிஷ் குமார் என்பவரின் வாழ்க்கை, ஒரே ஒரு அரசு உத்தரவால் தலைகீழாக மாறியிருக்கிறது.தனது ‘பிசினஸ் மேனேஜர்’ விசா புதுப்பிப... மேலும் பார்க்க

H-1B விசா போர்: இந்தியத் திறமையையும் வழிபாட்டு முறையையும் குறிவைக்கிறதா அமெரிக்கா?

ஹைதராபாத்தின் ஒரு கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் கால்களில் வேகம் இல்லை, ஆனால் கண்களில் ஒரு மாபெரும் 'அமெரிக்கக் கனவு' இர... மேலும் பார்க்க