செய்திகள் :

`GI டேக் கிடைச்சிருக்கு; ஆனா இந்தக் கலையைக் காப்பாத்த ஆள்தான் இல்லை!'- சொப்புச் சாமான் கலைஞர் சரவணன்

post image

"குழந்தை பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களோட கைவினைப் பொருள்கள் பயணிக்குது" என்று பெருமையுடன் கூறுகிறார், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் சரவணன். கடந்த 40 ஆண்டுகளாக சொப்புச் சாமான் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், பல தலைமுறைகளாகத் தொடரும் இந்தப் பாரம்பர்யக் கலையை உயிர்ப்புடன் பாதுகாத்து வருகிறார்.

சரவணன்

பல நூற்றாண்டுகளாக குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாக அறியப்படும் சொப்புச் சாமான், இன்று அம்பாசமுத்திரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. முன்பு கைச்சுழற்றல் முறையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருள்கள், தற்போது இயந்திரங்களின் உதவியுடன் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. ஒரு வீட்டிற்குத் தேவையான 32 வகையான சிறிய மரப்பொருள்கள் அடங்கிய செட்தான் சொப்புச் சாமான்.

``இந்தக் கைவினைக்காக தற்போது பெரும்பாலும் யூகலிப்டஸ் மரம் பயன்படுத்தப்படுகிறது. மரத்தை வெட்டியவுடன் பயன்படுத்த முடியாது. சுமார் ஆறு மாதங்கள் காயவைத்த பிறகே மரக்கடைசல் வேலை தொடங்கப்படுகிறது. அதன் பிறகு அரக்குடன் இயற்கை சாயங்களை கலந்து, தாழம்பூ ஓலையால் பாலிஷ் கொடுக்கப்படுகிறது. அரக்கு பாலிஷ்தான் இந்தக் கலையின் உயிர். அதைக் கற்றுக்கொள்ள தனி பயிற்சி தேவை" என்கிறார் சரவணன்.

சமீபத்தில் கிடைத்த GI (புவிசார் குறியீடு) அங்கீகாரம் இந்தக் கைவினைக்கு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. யூடியூப், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் வருவதாகக் கூறும் அவர், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அந்தத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை என வருத்தப்படுகிறார்.

"மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிரமம், மின்சாரச் செலவு, GST போன்ற சவால்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி இந்தக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்தத் தொழிலை விட்டுவிடும் எண்ணம் இல்லை; மாறாக, இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு" என்று உறுதியுடன் கூறுகிறார்.

தற்போது கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி, மதுரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் இவரது சொப்புச் சாமான்கள் விற்பனையாகின்றன. மேலும், இணையதளம் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர்.

பாரம்பர்யத்தையும், கலைநயத்தையும், குழந்தைப் பருவ நினைவுகளையும் ஒன்றாகச் சுமந்து நிற்கும் அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான், அனைவரது வீடுகளிலும் நிச்சயம் இருக்க வேண்டிய ஒன்று!

VIT: "படைப்பாளியைப் பார்க்காமல் படைப்புகளைப் பாருங்கள்"- ஞானபீடம் வைரமுத்துவுக்கு `ஞானம்பாடி' விருது

ஞானபீட விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதினை கடந்த ஜூலை 13 ஆம் தேதி வைரமுத்து பெற்றிருந்தார். அதற்காக இன்று வேலூர் வி.ஐ.டி தமிழியக்கம் சார்பில் ... மேலும் பார்க்க

தாளத்தில் தடம் பதிக்கும் ஜமாப் இசைக் குழு; கவனம் ஈர்க்கும் மருதமலை இளைஞர்கள்!

மருதமலைக்கு மேலே வசிக்கும் பழங்குடியின இளைஞர்கள் சுமார் 20 பேர் இணைந்து 2013-ஆம் ஆண்டு ஜமாப் இசைக் குழுவைத் தொடங்கினர். தங்களுக்குப் பிடித்த இந்த இசையில் திறமை இருப்பதை உணர்ந்த இளைஞர்கள், தனித்தனியாக ... மேலும் பார்க்க

`வெப்பத்தின் வெறியாட்டம்' - சமூக மாற்றத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் வித்திட்ட கட்டைக்கூத்து

அசார் சோஷியல் இம்பாக்ட் அட்வைசர்ஸ் நிறுவனமும், எம்.எஸ் . சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய வெப்பத்தின் வெறியாட்டம் கட்டைக்கூத்து நிகழ்ச்சி, வெகு சிறப்பாக நடைபெற்றது.அசார் சோஷியல் இம... மேலும் பார்க்க