`இரவினில் ஆட்டம்; பகலில் தூக்கம்; இதுதான் துணை முதல்வர் உலகம்" - எடப்பாடி பழனிசா...
IND vs PAK: ' இஷான் கிஷனின் ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனை' - கேப்டன் சூர்யகுமார் யாதவ்
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றி முழுக்க முழுக்க இந்தியாவுக்கானது.
நாங்கள் விளையாட நினைத்த அதே விதமான கிரிக்கெட்டையே இந்தப் போட்டியிலும் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவு என்று நினைத்தோம்.

ஆட்டம் தொடங்கியதும் 0/1 என்ற நிலையில், யாரோ ஒருவர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் இஷான் கிஷன் சற்று வித்தியாசமாக, ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனையுடன் விளையாடினார்.
அவர் அந்த பொறுப்பை எடுத்த விதம் உண்மையிலேயே அசாதாரணமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தை கணிப்பது சற்று கடினம்.
இரவில் பனி (Dew) இருக்கும் அளவு, பிச்சின் நடத்தை எல்லாம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.
இருந்தாலும், நாங்கள் எடுத்த ஸ்கோர், தேவையான ரண்களை விட சுமார் 15 ரன்கள் அதிகம் என்று உணர்ந்தோம். 155 இருந்தால்கூட அது கடினமான போட்டியாக மாறியிருக்கும்.

பந்து வீச்சில் அனைவரும் தங்களது பங்கினை சிறப்பாக செய்தது மிகவும் சந்தோஷம். ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தார்கள்.
இப்போது நாங்கள் ஒரு அணியாக ஒன்றாகச் சேர்ந்து இந்த வெற்றியை கொண்டாடுவோம். அதன் பிறகு அகமதாபாத் செல்லும் பயணத்தின் போது, அடுத்த போட்டிகளைப் பற்றி யோசிப்போம்” என்று பேசியிருக்கிறார்.




















