செய்திகள் :

IND vs SA: "கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல" - ஏபிடி சொல்லும் காரணம் என்ன?

post image

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் தொடரில் விளையாடவிருக்கிறது இந்திய அணி.

கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய அணி எதிர்கொண்டு வரும் நிலையற்ற தன்மை, சவால் மிகுந்த போட்டிகளில் தொடர் தோல்வி, பிட்சுக்கு ஏற்ற திட்டம் இல்லாமை, குறிப்பிட்ட வீரர்களுக்கு அதீத முக்கியத்துவம் போன்ற சிக்கல்கள் குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

அஷ்வின், ஏபிடி
அஷ்வின், ஏபிடி

இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூடியூப் சேனலில், கம்பீர் 'உணர்ச்சிப்பூர்வமான' வீரராக இருந்தது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.

அதில், "இந்திய தரப்பில் பார்க்கும்போது இது மிகக் கடினம். தலைமைத்துவத்தைப் பொறுத்தவரையில் ஜிஜி (கவுதம் கம்பீர்) எப்படி எனத் தெரியவில்லை. எனக்கு அவரை எமோஷனாலான வீரராகத் தெரியும், ட்ரெஸ்ஸிங் ரூமிலும் அப்படித்தான் என்றால், பொதுவாக ஒரு எமோஷனலான பயிற்சியாளர் இருப்பது நல்லதல்ல.

ஆனால் அவர் அந்த மாதிரியான கோச்தான். இதில் சரி, தவறு என்பது கிடையாது.

Gautam Gambhir
Gautam Gambhir

சில வீரர்கள் உடன் விளையாடிய முன்னாள் வீரர்களுடன் சகஜமாக இருப்பார்கள். சில வீரர்கள் இதற்கு முன்பு விளையாடியதில்லை என்றாலும், பயிற்சி அளிப்பதில் பல வருட அனுபவம் உள்ள ஒரு பயிற்சியாளருடன் வசதியாக உணர்வார்கள்" எனப் பேசியுள்ளார் ஏபிடி.

தொடர்ந்து, "நான் ஷுக்ரி (தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்) தலைமையில் விளையாடியதில்லை, இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் கவுதம் கம்பீருடன் இருந்ததில்லை. அதனால் திரைக்குப் பின்னால் உள்ள இயக்கவியல் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் இது வித்தியாசமானதாக இருக்கும்.

கேரி கிர்ஸ்டனின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்; அவர் ஒரு முன்னாள் வீரர், கவுதம் கம்பீரைப் போலவே இருக்கிறார். முன்னாள் வீரர் ஒருவர் அங்கு இருப்பதைப் பார்க்கும்போது சில வீரர்கள் தன்னம்பிக்கையையும், சௌகரியத்தையும் உணரலாம்" என்றும் பேசினார்.

IND vs SA: `358 அடிச்சும் பத்தல' சொதப்பல் பவுலிங்; வீணான ருத்துராஜ், கோலி சதம்; ஈஸியாக வென்ற தெ.ஆ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்றது.முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் ஆடிய ரியான் ரிக்கில்டன், சுப்ராயன், பார்ட்மன் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப... மேலும் பார்க்க

MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது" - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது.சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ண... மேலும் பார்க்க

IND vs SA: ``இதையெல்லாம் தலைக்கு ஏற்றினால் கிரிக்கெட் ஆட முடியாது" - விமர்சனங்களுக்கு ஹர்ஷித் பதிலடி

2024 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தபோது சற்று வெளிச்சத்துக்கு வந்தவர் ஹர்ஷித் ராணா.இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறக... மேலும் பார்க்க

Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நடந்த மிஷன் பாசிபில் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் தொகுப்பாளர் மணீஷ் பால் மற்றும் நக... மேலும் பார்க்க

Ind vs SA: "அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்" - ரோஹித் குறித்து சுவாரஸ்யம் பகிரும் பவுமா

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான அணி... மேலும் பார்க்க

``ருதுராஜ்க்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அது முட்டாள் தனம்'' - இந்திய அணி தேர்வு குறித்து அஷ்வின்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தெ... மேலும் பார்க்க