செய்திகள் :

Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DGCA தகவல்

post image

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.

நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம்

சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கொண்டு வந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்பட்டது.

குறிப்பாக விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

விமான சேவையின் பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சில புதிய விதிகளைத் திரும்பப்பெறுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதாவது "புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டிற்கும் தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம்" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் “இன்று இரவு முதல் அனைத்து விமான அட்டவணைகளும் சரிசெய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் தானாகவே முழு தொகையை திருப்பி அளிக்கும்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமையை நேரடியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் விமான சேவை பாதிப்புக்காக இண்டிகோ நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறது.

இதுத்தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,"நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக உங்களுக்கு இருந்த சிரமங்களை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. எங்களின் செயல்பாடுகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம். எங்கள் குழுக்கள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துடன் இணைந்து வழக்கமான செயல்பாடுகளை மீட்டமைக்க முயற்சித்து வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம்: `நீதித்துறை, இந்துத்துவா, திமுக - ஓரணியில் நின்று முறியடிப்போம்' - சீமான் அறிக்கை

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதிர்ப்பு ஏன்?" - திமுகவை கேள்வி எழுப்பும் சீமான்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்'' - எம்.பி கனிமொழி

திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத சக்திகள் ம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் : "திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.!" - அண்ணாமலை காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், நீதிபதி ஜி.ஆர்... மேலும் பார்க்க

Indigo: விமான சேவை பாதிப்பால் அவதியுற்ற பயணிகள்; விதிமுறைகளைத் திரும்ப பெற்ற DGCA

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,2... மேலும் பார்க்க