செய்திகள் :

Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?

post image

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். திடீரென ஈரான் தனது நாட்டு எல்லைக்குள் ஓடும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஈரான் மூடி இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்கவில்லையெனில், ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டொனால்டு ட்ரம்ப் மிரட்டி இருந்தார்.

ஆனால் திடீரென ஈரானுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் மின் உற்பத்தி மையங்கள் மீது நடத்த திட்டமிட்டு இருந்த தாக்குதலை 5 நாள்களுக்குத் தள்ளி வைத்து இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் தனது மத்திய கிழக்குத் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தனது மருமகனும் நெருங்கிய உதவியாளருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக ட்ரம்ப் கூறினார்.

அதோடு இப்பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தாலும், தற்போது அவை மிகவும் தீவிரமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு தீர்வு எட்டப்படக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் இந்தப் பேட்டி சமூக வலைதளத்தில் பெரிய அளவில் வைரலானது. ஆனால் அமெரிக்காவுடன் அது போன்று பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வைக்க பாகிஸ்தான், ஓமன் போன்ற நாடுகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் இவ்விவகாரத்தில் நேரடியாகத்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், மூன்றாவது நாடு மூலம் பேச மாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தைக்கு இப்போது ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது. இரானின் புதிய உச்சபட்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஓர் ஒப்பந்தத்தை எட்டவும் ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி 'அல் அரபியா' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! - தென்காசி மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது தென்காசி மாவட்... மேலும் பார்க்க

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்த... மேலும் பார்க்க

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. பெரிய கட்சிகளில் மீதமிருப்பது மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவு... மேலும் பார்க்க

'ஒரு அறை விட்டேன், அப்புறமும் பாலியல் தொல்லை குறைய‌லை!' - டெல்லி வரை சென்ற `நம்பர் 2' மீதான புகார்

மத்திய ஆளுங்கட்சி சார்பாக மக்களுக்குச் சொல்ல ஏதாவது கருத்து இருந்தால் முண்டியடித்துக் கொண்டு முதல் ஆளாக மீடியா முன் வந்து விடுகிறவர் அந்தப் பிரமுகர். மாநிலத்தில் இருக்கும் ஆளும் கட்சிக்கு எதிராக விவாத... மேலும் பார்க்க

சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?

ஈரான் போரினால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை இந்தியாவில் படாதப்பாடு படுத்தி வருகிறது. இந்தத் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் மிக முக்கியமான ஒன்று 'ஹோட்டல் துறை'. சென்னை போன்ற பெருநகர... மேலும் பார்க்க