செய்திகள் :

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

post image

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. பெரிய கட்சிகளில் மீதமிருப்பது மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவும் மட்டுமே. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு டபுள் டிஜிட்டலில் தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. நிலவரம் என்னவென விசாரித்தோம்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுக்கையில், 'கட்சியில் 84 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 90% பேர் திமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். வாக்கெடுப்பின் போது அந்த கருத்தை தெளிவாக சீட்டில் எழுதியும் கொடுத்தனர். அதன்படிதான் அண்ணியார் திமுகவுடன் கூட்டணி பேசி முடித்தார்.

ராஜ்ய சபா சீட்டும் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்பதில் அண்ணியார் உறுதியாக இருந்தார். கடந்த 2021 தேர்தலிலேயே சீட்டு எண்ணிக்கை ஒத்துவராததால்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தினகரனுடன் இணைந்து போட்டியிட்டார். அதனால் திமுகவில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேமுதிகவுக்கான ஏற்ற இடத்தை அண்ணியார் உறுதி செய்துவிடுவார் என நம்பினோம்.

அதன்படி திமுக தலைமையிடம் 12 சீட்டுகளை அண்ணியார் கேட்டிருக்கிறார். டபுள் டிஜிட்டில் தொகுதி ஒதுக்கப்படும் என உறுதி கொடுத்ததால்தான் கூட்டணிக்கே ஒப்பும் கொண்டார்.

பிரேமலதா
எல்.கே.சுதீஷ், பிரேமலதா, ஸ்டாலின்

நேற்று நடந்த மா.செக்கள் கூட்டத்திலும், 'நமக்கு 5-6 சீட்டுனு வெளிய பேசிக்குறாங்க. அதையெல்லாம் நம்ப வேணாம். கௌரவமான இடத்தைதான் பேசி முடிச்சிருக்கோம். நம்பிக்கையா இருங்க'னு மகிழ்ச்சியா பேசியிருந்தார். குறைந்தபட்சம் 10 தொகுதியையாவது அண்ணியார் வாங்கிட்டு வந்துடுவாங்க. அதனாலதான் திமுகவும் மற்ற கட்சிகளோட கையெழுத்து போட்டுட்டு கடைசியா எங்களை கூப்பிடுறாங்க. இன்று இரவோ அல்லது நாளையோ அண்ணியார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவார்' என்கின்றனர்.

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வரை கொடுக்க திமுக தயாராக இருப்பதாகவும், ஆனாலும் இயன்றவரை பேசி 9 இல் முடிக்க முயற்சிப்பதாகவும் அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளடி? ஏமாற்றப்பட்ட என்.ஜி.பார்த்திபன்! - சோளிங்கர் தொகுதி களேபரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க த... மேலும் பார்க்க

அண்ணாமலை கொடுத்த `லிஸ்ட்' - பரபரத்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பு!

அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'எந்தெந்த தொகுதிகளை அ.தி.மு.க-விடம் கேட்டுப் பெறுவது, அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது' என்ற ஆலோசனை கமலாலயத்தில் சூ... மேலும் பார்க்க

எதிரெதிர்: திமுக வேட்பாளர்களுக்கு தண்ணீர் காட்டும் காங்கிரஸ்; புகைச்சலில் புதுச்சேரி இந்தியா கூட்டணி

தி.மு.க தொகுதிகளுக்கு அடம்பிடித்த காங்கிரஸ்புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணிய... மேலும் பார்க்க

கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! - தென்காசி மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது தென்காசி மாவட்... மேலும் பார்க்க

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்த... மேலும் பார்க்க