செய்திகள் :

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகும் சிஎஸ்கே அணி; கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார்?

post image

ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது.

வருகின்ற மார்ச் 28ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் காண இருக்கிறது.

சிஎஸ்கே ரசிகர்கள்
சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை அணி எப்போதும் மூத்த மற்றும் அனுபவ வீரர்களை நம்பியிருப்பதில் பெயர் பெற்றிருந்தாலும், இந்த முறை பல இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

கார்த்திக் சர்மா

ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவிற்கு 20 வயதே ஆகிறது. இவரை சிஎஸ்கே 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

தன்னுடைய அதிரடி பேட்டிங்கிற்காக கவனம் பெற்ற கார்த்திக் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்போன அறிமுக வீரர் என்ற சாதனை படைத்திருந்தார்.

அதிரடி பேட்டராக அறியப்படும் இவர், கடந்த ரஞ்சி சீசனில் உத்தரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.

கார்த்திக் சர்மா
கார்த்திக் சர்மா

அதேமாதிரி, கடந்த விஜய் ஹசாரே தொடரிலும் 400+ ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக வந்தார்.

ராஜஸ்தான் அணிக்காக 11 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 27 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 316 ரன்கள் அடித்து விளாசியிருக்கிறார்.

ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வரும் கார்த்திக் சர்மா தோனியின் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாந்த் வீர்

கார்த்திக் சர்மாவைப் போலவே சிஎஸ்கே-வில் கவனம் ஈர்க்கும் மற்றொரு வீரர் பிரசாந்த் வீர். இவரையும் சிஎஸ்கே நிர்வாகம் 14.20 கோடி ரூபாய்க்கு தான் வாங்கியது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர், உத்தரப்பிரதேச டி20 லீக்கில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்றிருக்கிறார்.

பிரசாந்த் வீர்
பிரசாந்த் வீர்

முக்கியமான போட்டிகளில் ஃபினிசிங் வீரராக மாறி பல போட்டிகளை அணிக்காக முடித்துக்கொடுத்திருக்கிறார்.

இவருடைய பவுலிங் சிஎஸ்கேவில் இருக்கும் ஜடேஜாவிற்கான வெற்றிடத்தை நிரப்பும் என்றும் 2026 ஐபிஎல் தொடரில் நேரடியாக பிளேயிங் 11-ல் பிரசாந்த் வீர் விளையாடுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படேல்

கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் வரிசையில், சிஎஸ்கேவில் கவனத்தை ஈர்த்திருக்கும் மற்றொரு வீரர் உர்வில் படேல்.

குஜராத்தைச் சேர்ந்த 27 வயதான உர்வில் படேல், உள்நாட்டுப் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர்.

குறிப்பாக, 2023-ல் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் வெறும் 41 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தவர்.

உர்வீல் படேல்
உர்வீல் படேல்

சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் அல்லது மிடில் ஆர்டரில் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் வீரராக இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனிலும் உர்வீல் படேல் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RR: ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி! - யார் இவர்? என்ன விலை?

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட... மேலும் பார்க்க

"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

கவுதம் கம்பீரின் முரட்டுதனம் அவசியமற்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

IPL 2026: 'தோனி, ரெய்னா, பிராவோ, ஹைடன், முரளி' - சேப்பாக்கத்தில் OG CSK டீம் | Photo Album

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' - சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்! மேலும் பார்க்க

'தடை விதிக்கப்படும்!'- பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் ஆடும் வீரர்களுக்கு PCB எச்சரிகை

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட்... மேலும் பார்க்க

Kohli: "நாங்க அதிர்ஷ்டத்தால கோப்பையை வெல்லல, ஆனா பலர்.!" - ஆர்சிபி வெற்றி குறித்து கோலி

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றி குறித்து ஆர்சிபி நிர்வாகம் அவர்களது சமூக வலைதளப்பக்கத்... மேலும் பார்க்க

"மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்.!"- ராபின் உத்தப்பா சொல்வதென்ன?

எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கா... மேலும் பார்க்க