செய்திகள் :

Iran : அலி கமேனி இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் எங்கே இருந்தது? இஸ்லாமிய விதியை மீறி தாமதமானதா?

post image

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தற்போதுதான் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரானில் போர் உச்சகட்டத்தை எட்டியதால் அவரது இறுதிச்சடங்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

தற்போது அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து, கமேனியின் உடலுக்கு பிரமாண்ட அஞ்சலி செலுத்த ஈரான் மக்கள் தயாராகி வருகின்றனர். தலைநகர் டெஹ்ரான் மட்டுமன்றி, ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய 5 நகரங்களுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருக்கிறதாம். ஜூலை 9-ல் அவரது சொந்த ஊரான மஷாத் (Mashhad) நகரில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி

4 மாதங்களாக உடல் எங்கே... எப்படிப் பாதுகாக்கப்பட்டது?

இஸ்லாமிய முறைப்படி ஒருவர் இறந்த சில நாள்களிலேயே உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் மரபு. ஆனால், கமேனி பிப்ரவரி மாதமே கொல்லப்பட்டும், 4 மாதங்களாக இறுதிச்சடங்கு நடக்காதது ஏன் என்ற மில்லியன் டாலர் கேள்வி உலக அரங்கில் எழுந்தது.

பொதுவாக இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்படி உடலை ரசாயனங்கள் தடவி பதப்படுத்துவது (Chemical Embalming) தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க கமேனியின் உடல் எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பது பெரும் பேசுபொருளாக இருக்கிறது.

இது குறித்து சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் டாக்டர் முகமது உமர் விளக்குகையில், "போர்க்காலச் சூழல் போன்ற விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகளில், உடலை அடக்கம் செய்யத் தாமதப்படுத்துவதற்கும், குளிரூட்டப்பட்ட முறையில் உடலைப் பாதுகாப்பதற்கும் ஷியா (Shia) பிரிவு சட்டங்களில் சில விலக்குகள் உள்ளன. இதன்படி, கமேனியின் உடலுக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்தாமல், அதிநவீன மிகக் குளிர்ந்த குளிர்பதனக் கிடங்கில் (Refrigerated Cold Storage) வைத்து உறைநிலையில் 4 மாதங்களாகப் பாதுகாத்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார்.

ஈரான்

அரசியல் பின்னணி!

ஈரானில் மிக நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த ஒரு உச்ச தலைவரின் இறுதிச்சடங்கை, சாதாரணப் போர்க்களச் சூழலில் அவசர அவசரமாக நடத்த ஈரான் அரசு விரும்பவில்லை. அமெரிக்காவுடன் ஒரு சுமுகமான தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்படும் வரை காத்திருந்து, தற்போது உலக நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கமேனிக்கு நெஞ்சார்ந்த மிகப்பெரிய பிரியாவிடை கொடுக்க ஈரான் திட்டமிட்டிருக்கிறது.

இஸ்லாமிய சட்ட விதிகளுக்குள் இத்தகைய விலக்குகளைப் பெற்று, 4 மாதங்களுக்குப் பிறகு கமேனியின் இறுதி ஊர்வலத்தை ஈரான் அரசு நடத்துவது சர்வதேச அளவில் டாக்-ஆக இருக்கிறது.

`கடும் வேதனையளிக்கிறது; விசாரணையை நம்புகிறோம்!' - அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கையாடல் குறித்து RSS

அயோத்தி ராமர் கோயிலில் நடந்துள்ள நன்கொடை கையாடல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கும் இந்தக் கோயிலில் அரங்கேறியுள்ள இந்தச்... மேலும் பார்க்க

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பிய... மேலும் பார்க்க

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள்... மேலும் பார்க்க

US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை!

அமெரிக்கா... உலக வல்லரசு, வாய்ப்புகளின் தேசம், அமெரிக்கக் கனவை நனவாக்க துடிக்கும் கோடிக்கணக்கானோரின் புகலிடம். ஆனால், அந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஒரு தலைமுறையின் ஓய்வுக்காலமே இன்று கேள்விக்க... மேலும் பார்க்க

கடலூர்: மாநகராட்சிக் கூட்டத்தில் தலைவர்களின் போட்டோ அட்ராசிட்டி! - கவுன்சிலர்களால் நொந்து போன மேயர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடலூர் மாநகராட்சியில் முதல் கூட்டம் நேற்று நடந்தது. புதிய ஆணையர் கிஷன்குமார் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் சுந்தரி தலைமை தாங்கினார்.... மேலும் பார்க்க