செய்திகள் :

`கடும் வேதனையளிக்கிறது; விசாரணையை நம்புகிறோம்!' - அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கையாடல் குறித்து RSS

post image

அயோத்தி ராமர் கோயிலில் நடந்துள்ள நன்கொடை கையாடல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கும் இந்தக் கோயிலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் குறித்து, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு தற்போது தனது முதல் அதிகாரப்பூர்வ எதிர்வினையை ஆற்றியுள்ளது.

"கடும் வேதனையளிக்கிறது!"

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தி ராமர் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணம் திருடப்பட்டிருக்கும் இந்த துரதிஷ்டவசமான சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தின் மற்றும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ராம பக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் நாம் அனைவரும் மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

மேலும் அவர், ``ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வேண்டுகோளின் பேரில், உத்தரப்பிரதேச அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்-ன் எதிர்பார்ப்பு என்ன?

அறக்கட்டளையின் நிர்வாகக் குளறுபடிகள் குறித்துப் பேசிய ஹோசபாலே, "இந்தக் கண்டனத்திற்குரிய சம்பவத்தை ஓர் அசாதாரணமான விஷயமாகக் கருதி, கோயில் நிர்வாகத்திலும் மேலாண்மையிலும் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் களைய ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உரிய, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை தொடரும். தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்

"சதித் திட்டம்... பொறுமை அவசியம்!"

இதேவேளையில், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் மற்றும் மதரீதியான விமர்சனங்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய தத்தாத்ரேயா ஹோசபாலே, "இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தைப் பயன்படுத்தி, இந்து தர்மத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த 'இந்து எதிர்ப்பு மற்றும் தேச விரோத சக்திகள்' முயன்று வருகின்றன. இந்தச் சதித் திட்டங்களை முறியடிக்க, இந்த இக்கட்டான தருணத்தில் ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் தேவையான பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

உண்டியல் பணம் கையாடல் விவகாரத்தில் முன்னாள் அறக்கட்டளை நிர்வாகி சம்பத் ராய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த அறிக்கை அயோத்தி விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

Iran : அலி கமேனி இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் எங்கே இருந்தது? இஸ்லாமிய விதியை மீறி தாமதமானதா?

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தற்போதுதான் தொடங்கியிருக்கின்றன. அ... மேலும் பார்க்க

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பிய... மேலும் பார்க்க

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள்... மேலும் பார்க்க

US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை!

அமெரிக்கா... உலக வல்லரசு, வாய்ப்புகளின் தேசம், அமெரிக்கக் கனவை நனவாக்க துடிக்கும் கோடிக்கணக்கானோரின் புகலிடம். ஆனால், அந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஒரு தலைமுறையின் ஓய்வுக்காலமே இன்று கேள்விக்க... மேலும் பார்க்க

கடலூர்: மாநகராட்சிக் கூட்டத்தில் தலைவர்களின் போட்டோ அட்ராசிட்டி! - கவுன்சிலர்களால் நொந்து போன மேயர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடலூர் மாநகராட்சியில் முதல் கூட்டம் நேற்று நடந்தது. புதிய ஆணையர் கிஷன்குமார் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் சுந்தரி தலைமை தாங்கினார்.... மேலும் பார்க்க