"`நரேந்திர' என்ற பெயர் பிடிக்கலை..!" - குத்துச்சண்டை வீரர் பகிர்ந்த சம்பவம்; உரக...
Karuppu: "அதுக்கு பட்ஜெட் இல்லப்பா!" - 'சிங்கம்' போலீஸ் காட்சி குறித்து ஆர்.ஜே. பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆர்.ஜே. பாலாஜியின் பச்ச சட்ட பாட்காஸ்டிற்குத் தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஸ்பாட்டிஃபை நடத்திய 'பச்ச சட்ட - The Resurgence' நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'பச்ச சட்ட' பாட்காஸ்ட் ரசிகர்களைச் சந்தித்து உரையாடினார் ஆர்.ஜே. பாலாஜி.

ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், "'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு மூணு டிக்கெட் கேட்ட மாதிரிக் காட்சி வருது. அது லாஜிக் மிஸ்டேக். ஆனா அந்தப் படம் தியேட்டர்லயே ரிலீஸ் ஆகலை.
அது எனக்கே தெரியும். வேற யாராவது டைரக்டர் படத்தை வச்சிருந்தா, 'என்னய்யா என் படத்தை இப்படி வச்சு காமெடி பண்ணிட்டீங்க'னு நினைப்பாங்க. எதுக்கு வம்புன்னுதான் என் சொந்தப் படத்தையே வச்சுட்டேன்.
படத்தோட இன்டர்வெல் காட்சியில நாலு ஷாட்ல கிராபிக்ஸ் வேலைகள் சுத்தமா நல்லாவே இருக்காது. பிறகு அதை மாத்திட்டோம். பிறகு கிளைமேக்ஸ்ல வர்ற சிங்கம் சூர்யாவுக்கு திடீர்னு மூஞ்சி அப்படி ஆயிடுச்சேன்னு கேக்குறீங்களா?
அதுக்கு பட்ஜெட் இல்லப்பா!" என நகைச்சுவையாகச் சொன்னவர் 'கருப்பு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து, "நான் தியேட்டர்ல போய் 'காந்தாரா' படம் பார்த்தப்போ, அங்கிருந்த மக்கள் எல்லாரும் அந்த ஒரு சீனை மெய்மறந்து பார்த்தாங்க.
நமக்குத் தெரியாத சாமியை, தியேட்டர்ல மக்கள் இவ்வளவு பிரமிச்சுப்போய் பார்க்கிறாங்களே, அப்போ நம்ம ஊரு சாமியை வச்சு நாம ஏன் இந்த மாதிரி ஒரு விஷயம் பண்ணக் கூடாதுனு தோணுச்சு.

அப்படி அந்தப் படத்துல இருந்து இன்ஸ்பையர் ஆகிச் சேர்த்ததுதான் இந்த கிளைமேக்ஸ் காட்சி. மத்தபடி கதையில கூடுதலாக எதுவுமே சேர்க்கல.
எல்லாமே எழுதும்போது என்ன இருந்ததோ அதுதான். படத்துல பெருசா டான்ஸ் ஆடுற மாதிரி பாட்டுகள் இல்லைங்கிறதால, எல்லா ஃபைட் சீன்களையுமே பாடல்களோடு சேர்த்துக்கலாம்ங்கிற முடிவை முன்னாடியே எடுத்துட்டோம்" என்றார்.


















