செய்திகள் :

Modi: ``அந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது பாஜகதான்" - பிரதமர் மோடி

post image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீன் தயாள் உபாத்யாய் மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களைப் போற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 'ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்' என்ற அருங்காட்சியகம் ரூ.232 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த 'ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்' அருங்காட்சியகம், பா.ஜ.க-வின் தேர்தல் சின்னமான தாமரை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தில், மூன்று தலைவர்களின் பிரம்மாண்ட வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்
ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்

அப்போது, ``ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இது. லக்னோ ஒரு புதிய உத்வேகத்தைக் கண்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் செய்யப்பட்ட ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும், ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டுமே பெருமை சேர்க்கும் போக்கு நிலவியது.

எழுத்தாளர்கள், அரசுத் திட்டங்கள், அரசு நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே போற்றி வந்தன.

அந்தக் குடும்பத்தின் பெயர்களும், அவர்களின் சிலைகளும் மட்டுமே இருந்தன. இந்த அடிமைத்தனத்திலிருந்து பா.ஜ.க நாட்டை மீட்டெடுத்துள்ளது. எனது அரசு ஒவ்வொரு தலைவரும் ஆற்றிய பங்களிப்பை மதிக்கிறது.

அம்பேத்கரின் பாரம்பர்யத்தை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை யாராலும் மறக்க முடியாது. டெல்லியில் உள்ள காங்கிரஸின் அரச குடும்பம் இந்தப் பாவத்தைச் செய்தது.

சமாஜ்வாடி கட்சியும் உத்தரப்பிரதேசத்தில் அதே தவறான முயற்சியை மேற்கொண்டது. ஆனால், பாபாசாகேப்பின் பாரம்பர்யத்தை அழித்துவிட பா.ஜ.க அனுமதிக்கவில்லை. தலித் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டவருடன் தொடர்புடைய அனைத்தையும் எனது அரசு பாதுகாத்துள்ளது.

ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்: மோடி
ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்: மோடி

குடும்ப அரசியல் ஒரு தனித்துவமான குணாதிசயத்தைக் கொண்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பின்மை என்ற மனநிலையில் இருப்பார்கள். எனவே, மற்றவர்களை இழிவுபடுத்துவது அவர்களுக்குக் கட்டாயமாகிவிடும். அதன் மூலம் தங்கள் பெருமையைப் பெரியதாகக் கருதுவார்கள். அதன் மூலம் தங்கள் அரசியல் செல்வாக்கு தொடரும் என்றும் நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை இந்தியாவில் அரசியல் தீண்டாமையை அறிமுகப்படுத்தியது.

இந்தியாவுக்குப் பல நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத பிரதமர்கள் இருந்தனர். ஆனால் டெல்லியில் உள்ள அருங்காட்சியகம் அவர்களைப் புறக்கணித்தது. பா.ஜ.க மற்றும் என்.டி.ஏ இந்த நிலையை மாற்றின. காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும் பா.ஜ.க-வைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தினார்கள்.

ஆனால் அனைவரையும் மதிப்பதுதான் பா.ஜ.க-வின் கலாச்சாரம். 2014-ல் நான் பிரதமராவதற்கு முன்பு 25 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்பு இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 95 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது" என்றார்.

6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத்திய இந்தியா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k - 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது.அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்த... மேலும் பார்க்க

மும்பை: "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து" - புறாக்களுக்கு உணவளித்தவருக்கு நீதிமன்றம் அபராதம்

மும்பையில் பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு கொடுக்க மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தடை விதித்து இருக்கிறது. பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு போடுவதால் பொதுமக்களின் உடல் நலத்திற்கு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண... மேலும் பார்க்க

பாமகவில் இருந்து ஜி.கே மணி நீக்கம்; அன்புமணி தரப்பு அதிரடி

பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கம் செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இருவரும் ஒ... மேலும் பார்க்க

Nigeria: "கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொல்கிறார்கள்; அதனால் ISIS தீவிரவாதிகளைத் தாக்கினோம்" - ட்ரம்ப்

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந... மேலும் பார்க்க