செய்திகள் :

MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது" - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

post image

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது.

சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது.

அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது.

கபில் தேவ் - தோனி - ஹர்மன்பிரீத் கவுர்
கபில் தேவ் - தோனி - ஹர்மன்பிரீத் கவுர்

இதற்கு மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கடந்த மாதம் சொந்த மண்ணில் மகளிர் உலகக் கோப்பையை வென்று அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றியது.

இந்த நிலையில், தான் கேப்டனாகப் பதவி வகித்த காலத்தில் இருந்த 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான தோனி, இந்திய மகளிர் அணியும் ஆடவர் அணியும் இன்னும் 100 கோப்பைகளை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியதோடு, தன் கிரிக்கெட் வாழ்வின் மிக நெகிழ்வான தருணம் குறித்து பேசியுள்ளார்.

குஜராத்தின் பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற மிஷன் பாசிபிள் (Mission Possible) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2011 உலகக் கோப்பையில் இறுதிபோட்டியின் கடைசி நிமிடங்களை நினைவுகூர்ந்த தோனி, ``மும்பை வான்கடே ஸ்டேடியம் அவ்வளவு பெரிய ஸ்டேடியம் இல்லை. எல்லா சத்தமும் உள்ளேயே இருக்கும்.

அன்று இறுதிப் போட்டியில் கடைசி பந்துக்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பு ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் `வந்தே மாதரம்' பாடல் பாடத் தொடங்கினர்.

தோனி
தோனி

ஸ்டேடியத்தில் ஒரு மூலையில் அந்தப் பாடல் தொடங்கி நிறைய குரல்களுடன் ஒரு மெக்சிகன் அலை போல நகர்ந்து வந்தது.

அந்தச் சத்தத்துக்கு நடுவில் நிற்கும்போது அது நகர்வதை உங்களால் உணர முடியும். என் கிரிக்கெட் வாழ்வில் மிகச் சிறப்பான தருணம் அது.

அந்த சமயத்தில் எனக்கு இருந்த மிகச் சிறந்த நெகிழ்வான உணர்வு என்று அதைக் கூறுவேன்.

2011 ஒருநாள் உலகக் கோப்பை - தோனி
2011 ஒருநாள் உலகக் கோப்பை - தோனி

எமோஷனலாக மிகவும் நெகிழ்ந்தேன். அந்த மாதிரியான தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம்.

இந்தியா மீண்டும் வெல்லும். மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் வெற்றி பெறுவார்கள். கடவுள் அவர்களை 100 முறை வெற்றிபெறச் செய்யட்டும்" என்று கூறினார்.

IND vs SA: ``இதையெல்லாம் தலைக்கு ஏற்றினால் கிரிக்கெட் ஆட முடியாது" - விமர்சனங்களுக்கு ஹர்ஷித் பதிலடி

2024 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தபோது சற்று வெளிச்சத்துக்கு வந்தவர் ஹர்ஷித் ராணா.இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறக... மேலும் பார்க்க

Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நடந்த மிஷன் பாசிபில் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் தொகுப்பாளர் மணீஷ் பால் மற்றும் நக... மேலும் பார்க்க

Ind vs SA: "அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்" - ரோஹித் குறித்து சுவாரஸ்யம் பகிரும் பவுமா

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான அணி... மேலும் பார்க்க

``ருதுராஜ்க்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அது முட்டாள் தனம்'' - இந்திய அணி தேர்வு குறித்து அஷ்வின்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தெ... மேலும் பார்க்க

IND vs SA: "நேற்றைய ஆட்டத்தில் 2016-18 ஆம் ஆண்டுகளின் கோலி வெர்ஷனைப் பார்த்தோம்" - குல்தீப் யாதவ்

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் ந... மேலும் பார்க்க

IND vs SA: "களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்"- ஆட்டநாயகன் கோலி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையி... மேலும் பார்க்க