செய்திகள் :

Nepal Flood : '84 தமிழர்களை காணவில்லை' - நேபாள வெள்ளம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, '26.08.2026 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அங்கிருக்கும் தமிழர்களை மீட்கும்பணிகளில் இறங்கினோம். 27.08.2026 அன்று முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்திவிட்டு தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி சென்றது.

அங்கே மீட்புப் பணிக்கான உதவி மையங்களும் அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு டெல்லி இல்லத்தின் ஆணையர் ஆஷிஸ் மிஸ்ரா காத்மண்டுவுக்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டார். தமிழக அமைச்சர்கள் குழு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஷ்ரியை சந்தித்து மீட்புப் பணிகள் குறித்து ஆலோசித்தது. முதற்கட்டமாக 21 தமிழர்கள் நேபாளத்திலிருந்து மீட்டு வரப்பட்டனர். அவர்களுக்கான பயண செலவை அரசே ஏற்றது.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

305 தமிழர்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றது அறியப்பட்டது. அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 84 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. கும்பகோணம் நிறுவனம் மூலம் 57 பேர் நேபாளம் சென்றனர். அவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். குரோம்பேட்டை சேர்ந்த நிறுவனம் மூலம் 49 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களை தொடர்புகொள்ள தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளம் சென்றவர்களின் உறவினர்கள் நேபாளம் செல்ல விரும்பினால் அரசே ஏற்பாடுகளை செய்துகொடுக்கும். மீட்புப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.' என்றார்.

`தாய் வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்!’ – அதிரடி காட்டிய நீதிமன்றம்; அசராத புதுச்சேரி அரசு

புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அதேசமயம் தந்தையின் இருப்பிடத்தைத் அடிப்... மேலும் பார்க்க

Nepal Floods: தமிழர்களை மீட்க காட்மண்டுவில் தமிழக அதிகாரிகள்! - அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கிட்டதட்ட 900 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த வெள்ளப... மேலும் பார்க்க

'அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்'- எதிர்க்கட்சி வரிசையில் தாரகை; மாணிக்கம் தாகூர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரான தாரகை கத்பர்ட், ஆளுங்கட்சி வரிசையிலிருந்து திடீரென எதிர்க்கட்சிகளுக்கான முதலாவது வரிசைக்... மேலும் பார்க்க

'பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு' - தவெக-க்கு காங்கிரஸ் மீண்டும் பதிலடி

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரதம வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார்... மேலும் பார்க்க

`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்கி வாசுதேவ்

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ ... மேலும் பார்க்க

'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' - சபாநாயகர் விளக்கம்

சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் இடையே பேசிய சபாநாயகர் 'சட்டமன்ற நேரலை' குறித்து விரிவாக பேசியிருந்தார். சபாநாயகர்திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசு... மேலும் பார்க்க