செய்திகள் :

'பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு' - தவெக-க்கு காங்கிரஸ் மீண்டும் பதிலடி

post image

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரதம வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர் ராகுல் காந்தியை 2029 இல் பிரதமராக ஏற்காவிட்டால் தமிழகத்தில் த.வெ.க அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் கருத்தினை வரவேற்கிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசை எதிர்த்து மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவர் ராகுல் காந்தி அவர்கள் மட்டுமே.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையையும் முடிவுகளையும் வைத்துக்கொண்டு வலுவாக வேர்விட்ட அரசியல் கட்சியாக த.வெ.க உருவாகி விட்டதாக போலியாக நினைத்து தமிழக அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேர் கொண்ட மரங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் துளிர்க்கலாம். பூக்கலாம். எந்த இயற்கை சீற்றத்தையும் தாங்கும் சக்தியும் வேர்கொண்ட மரங்களுக்கு உண்டு .

ஆனால் த.வெ.க இப்பொழுது தான் முளைக்கத் தொடங்கியுள்ள செடி. வேர் விட்டு வளரும் வரை பொறுமை காக்க வேண்டும். தமிழக கள அரசியலை புரிந்து கொண்டு மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து இயக்கம் வளர்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து இன்னமும் பூரண மெஜாரிட்டி இல்லாத சூழலில் இல்லாத ஊருக்கு வழி தேடுவது த.வெ.க-வின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`தாய் வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்!’ – அதிரடி காட்டிய நீதிமன்றம்; அசராத புதுச்சேரி அரசு

புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அதேசமயம் தந்தையின் இருப்பிடத்தைத் அடிப்... மேலும் பார்க்க

Nepal Floods: தமிழர்களை மீட்க காட்மண்டுவில் தமிழக அதிகாரிகள்! - அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கிட்டதட்ட 900 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த வெள்ளப... மேலும் பார்க்க

'அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்'- எதிர்க்கட்சி வரிசையில் தாரகை; மாணிக்கம் தாகூர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரான தாரகை கத்பர்ட், ஆளுங்கட்சி வரிசையிலிருந்து திடீரென எதிர்க்கட்சிகளுக்கான முதலாவது வரிசைக்... மேலும் பார்க்க

Nepal Flood : '84 தமிழர்களை காணவில்லை' - நேபாள வெள்ளம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். ஆதவ் அர்ஜுனா ஆதவ் அர்ஜூனா பேசியதா... மேலும் பார்க்க

`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்கி வாசுதேவ்

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ ... மேலும் பார்க்க

'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' - சபாநாயகர் விளக்கம்

சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் இடையே பேசிய சபாநாயகர் 'சட்டமன்ற நேரலை' குறித்து விரிவாக பேசியிருந்தார். சபாநாயகர்திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசு... மேலும் பார்க்க