கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
Rain Alert: ``கடலுக்கு செல்ல வேண்டாம்; 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்'' - வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியிருக்கிறது.
ஆனால் சென்னையில் மழை குறைவாக பதிவாகி உள்ளது.
இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் ஒன்றாகக் காணப்படுகின்றன. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.
மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும்.
டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லையில் நாளை கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 25, 26 ஆம் தேதி சூறவாளிக்காற்று 35 - 45 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.















