செய்திகள் :

Rain Update: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? Cyclone Ditwah Update

post image

டிட்வா புயல் வட தமிழக கடற்கரையோர பகுதியில் கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் சிகப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

சென்னையிலிருந்து 220 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலால் நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிறது மழை. இன்றும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் - கடல் சீற்றம்
டிட்வா புயல் - கடல் சீற்றம்

Ditwah புயல் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) குறைய வாய்ப்புள்ளது. எனினும் புதுச்சேரி மாநிலத்துக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வட தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, அரியலூர் மாவட்டங்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

வானிலை ஆய்வு மையம் வெளியீடு
வானிலை ஆய்வு மையம் வெளியீடு

முன்னதாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புயல் தமிழகத்தைத் தாண்டி தெற்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

நாளை (நவ. 1) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நிலையற்ற வானிலை நிலவுவதால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியதால் கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வ... மேலும் பார்க்க

சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?

சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்... மேலும் பார்க்க

சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம... மேலும் பார்க்க