செய்திகள் :

RCB: "கிரிக்கெட் மீது எனக்கு இருக்கும் தீராத காதலே என்னை இன்றும் இயக்கி வருகிறது" - ஆட்டநாயகன் கோலி

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற கொல்கத்தா vs பெங்களூரு போட்டியில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் விராட் கோலி.

இவரின் இந்த சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி, 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது பெங்களூரு அணி.

விராட் கோலி
விராட் கோலி

வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, "இந்த 9-வது சதம் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் நான் அதை பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஏனென்றால் தற்போது புள்ளிப் பட்டியலில் எங்களுக்கு ஒவ்வொரு புள்ளியும் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.

அணிக்காகப் பங்களிப்பது மற்றும் நான் நீண்ட நேரம் களத்தில் நின்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்து விளையாடுவது எனது கடமை. கடந்த இரண்டு போட்டிகளில் நான் சரியாக ரன் எடுக்காதது என்னை ஒருவிதத்தில் பாதித்தது, சதம் அடிக்கிறோமா இல்லையா என்பதை விட, ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து அந்த 2 புள்ளிகளைப் பெறுவதே எனக்கு முக்கியம்.

அழுத்தம் என்பது ஒரு கௌரவம் போன்றது, அதுதான் உங்களை அடக்கமாக இருக்க வைக்கிறது, பயிற்சியில் இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. நாம் நன்றாக விளையாடும் போது சில சமயம் கவனக்குறைவாக இருக்க வாய்ப்புண்டு, ஆனால் தோல்விகளும் அழுத்தமும் நம்மை மீண்டும் ஒரு சிறந்த வீரராக மாற்றும்.

இந்த ஆட்டத்தில் தேவையற்ற ரிஸ்க் எடுக்காமல் பந்துகளை கேப்களில் தட்டிவிட்டது எனக்கு மிகுந்த திருப்தியைத் தந்தது. எப்போது பவுண்டரி அடிக்க வேண்டும், எப்போது ஓடி ரன்கள் எடுக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

விராட் கோலி
விராட் கோலி

சாதனைகளைப் பற்றி எனக்குப் பெரிய கவலையில்லை, கிரிக்கெட் மீது எனக்கு இருக்கும் தீராத காதலே என்னை இன்றும் இயக்கி வருகிறது. களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் எனது ஆன்மாவைத் தந்து விளையாடுகிறேன்.

ஏனென்றால் இது ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது எனக்குத் தெரியும். அதுவரை ஒவ்வொரு சூழலையும் சவாலாக ஏற்று ரசித்து விளையாட விரும்புகிறேன். பேட்டின் நடுவில் பந்து படும்போது கிடைக்கும் அந்த மகிழ்ச்சியே எனக்குப் போதும். எல்லாம் இறைவனின் அருள், அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 'Unfollow'... மும்பை அணிக்கு துரோகமா? - ஹர்திக் மீது பாய்ந்த முன்னாள் வீரர்கள்!

ஐபிஎல் 2026 தொடரில் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தச் சோகம் ஒருபுறம் இருக்க, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் செய்... மேலும் பார்க்க

IPL 2026: புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள்! - பிளே-ஆஃப் சுற்றை எட்டப்போகும் 4 அணிகள் எவை எவை?

ஐபிஎல் 2026 சீசன் அதன் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது! மைதானத்தில் பந்துகள் பறப்பதைக் காட்டிலும், புள்ளிப்பட்டியலில் அணிகள் முன்னும் பின்னும் நகருவதைப் பார்ப்பதுதான் ரசிகர்களுக்கு இப்போது பெரிய சுவாரச... மேலும் பார்க்க

CSK vs LSG: "'இப்படியே விளையாடு'ன்னு எங்க அப்பா சொன்னாரு" - அரைசதம் குறித்து உர்வில் உருக்கம்

நேற்று (மே. 11) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன் உர்வில் படேல் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். 13 பந்துகளில் அரைசதம் ... மேலும் பார்க்க

RCB vs MI: மைதானத்தில் தகாத வார்த்தைகளைப் பேசிய RCB பயிற்சியாளர்; பிசிசிஐ-யின் நடவடிக்கை என்ன?

ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவருக்கு பிசிசிஐ அபராதம் விதித்திருக்கிறது. நேற்று (மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்த... மேலும் பார்க்க

CSK vs LSG: "நம்மால் மீண்டும் போட்டிக்குள் வர முடியும் என அவர்தான் உத்வேகம் கொடுத்தார்" - ருதுராஜ்

ஐபிஎல் தொடரில் இன்று (மே 10) நடைபெற்ற சென்னை vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டி என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு நெருக்கமாக விளையாடி ஒரு அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி. இந்... மேலும் பார்க்க

DC vs KKR: "அவர்களை போன்ற வீரர்கள் அணியில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்" - கேப்டன் ரஹானே

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே-8)நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 143 என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. இத... மேலும் பார்க்க