செய்திகள் :

ஸ்லீப்பர் பஸ்ஸுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - டெல்லியில் பயங்கரம்

post image

நாட்டின் தலைநகர் டெல்லியின் நங்லோய் பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்துக்குள் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், பிதம்புரா குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் என்றும் காவல்துறை கூறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு, அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சரஸ்வதி விஹார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஸ்லீப்பர் பேருந்து நின்றுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அந்தப் பேருந்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் நேரம் கேட்பதற்காக அந்தப் பெண் அணுகியுள்ளார். அப்போது, அவர் வலுக்கட்டாயமாகப் பேருந்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், ராணி பாக் பகுதியிலிருந்து பேருந்தை நங்லோய் பகுதிக்கு ஓட்டிச் சென்று, அங்கு அந்தப் பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டதும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தலைநகரில் மீண்டும் ஒருமுறை பெண்ணுக்கு எதிரான வன்முறை அரங்கேறியுள்ளது, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொலையில் முடிந்த மதுபோதை தகராறு, வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கோகுல். தன்னுடைய நண்பர்களான‌ மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜருகுமலை அடிவாரப் பகுதிக்குச் செ... மேலும் பார்க்க

நெல்லை: விஜய் முதல்வராவதில் ஏற்பட்ட இழுபறி; விரக்தியில் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழந்த பரிதாபம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழு... மேலும் பார்க்க

நாட்டில் குற்றச் சம்பவங்களின் சதவிகிதம் குறைந்தாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

தேசிய குற்ற ஆவண காப்பக தரவவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' (CRY) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒட்டுமொத்த குற்றச்சம்பவஙகளின் எண்ணிக்கை 10.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் - திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம்

கிருஷ்ணகிரி அருகே இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையானது ராணுவ வீரரும் அவர் தந்தை என்பதும், திருமணம் மீறிய விவகாரத்தால் இக்கொலை நடந்துள்ளத... மேலும் பார்க்க

NEET : 30 நிமிடத்தில் கைமாறிய வினாத்தாள்:ரூ.10 லட்சத்துக்கு வாங்கி ரூ.15 லட்சத்தில் விற்ற மாணவர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததை தொடர்ந்து ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் படித்த மாண... மேலும் பார்க்க

போனுக்கு வந்த திருமண அழைப்பிதழ்; 5 லட்சத்தை இழந்த நபர்- புது வகை மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

பெங்களூருவைச் சேர்ந்த நூர் நஹித் கான் என்ற 42 வயது தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "எங்கள் திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். முழுமையான விவரங்களுக்குக் கீழே இ... மேலும் பார்க்க