செய்திகள் :

Sanchar Saathi: சைபர் செக்யூரிட்டி செயலியுடன் ஸ்மார்ட்போன் தயாரிக்க மத்திய அரசு உத்தரவு

post image

நாட்டில் டிஜிட்டல் கைது மற்றும் இணைய குற்றங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியில் பெரும்பாலும் பெண்கள், முதியோர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இக்குற்றங்களை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பெரிய அளவில் பயனளிக்கவில்லை.

சி.பி.ஐ அதிகாரிகள், போலீஸார், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி இணைய கும்பல் பணம் பறித்து வருகிறது. இதையடுத்து ஸ்மார்ட் போன்களில் சைபர் செக்யூரிட்டி செயலியான Sanchar Saathi கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இனிமேல் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் கட்டாயம் சைபர் செக்யூரிட்டி செயலிகள் இடம் பெறவேண்டும் என்று மத்திய அரசு ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Sanchar Saathi - Cybersecurity App
Sanchar Saathi - Cybersecurity App

இந்த உத்தரவை வரும் 90 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Sanchar Saathi செயலியை மத்திய அரசு தயாரித்து இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி மூலம் காணாமல் போன அல்லது திருடப்பட்ட 7 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் மட்டும் 50 ஆயிரம் போன்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 50 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சைபர் செக்யூரிட்டி செயலியை தங்களது கம்பெனி போனை தயாரிக்கும்போதே சேர்த்து தயாரிக்க சாம்சங், விவோ போன்ற பெரும்பாலான கம்பெனிகள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஸ்மார்ட் போன்
ஸ்மார்ட் போன்

ஆனால் ஆப்பிள் போன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்களது கம்பெனி தயாரிக்கும் செயலிகளை மொபைல் போனில் பதிவேற்றம் செய்து வெளியிடுகிறது.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் புதிய சைபர் செக்யூரிட்டி செயலியை சாப்ட்வேரை அப்டேட் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் மத்திய அரசு தங்களிடம் கேட்காமல் இது போன்ற செயலிகளை தயாரித்து மொபைல் போனில் பதிவேற்றம் செய்ய சொல்வதாக மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் இந்த செயலி சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் குறித்து உஷார்படுத்துவதோடு, IMEI நம்பர்களையும் சரிபார்க்கும். உலகில் மிகப்பெரிய மொபைல் போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

`வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை பயன்பாட்டுக்கு சிம் கார்டு கட்டாயம்' - புதிய விதிகள் என்ன சொல்கிறது?

வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை மொபைல் போன்ற செயலிகளை ஒரு முறை சிம் கார்டை கொண்டு பதிவிறக்கம் செய்து கொண்ட பிறகு அந்த சிம் கார்டை எடுத்துவிட்டாலும், வேறு சிம் கார்டு அல்லது இன்டர்நெட் மூலம் வாட்ஸ்அப்பை ... மேலும் பார்க்க

``எங்கள் காதல் சாகவில்லை'' - இறந்த காதலனை திருமணம் செய்வதாக அறிவித்த பெண்

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள ஜுனா கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அச்சல் (20). இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அவரது சகோதரனின் நண்பன் சக்‌ஷாம் அடிக்கடி வந்து செல்வதுண்டு. இவ்வாறு வந்து சென்றபோத... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா: 62 வயதில் காதலியை மணந்த அந்தோணி; பதவிக்காலத்தில் திருமணம் செய்த முதல் பிரதமராகிறார்!

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தனது நீண்ட நாள் காதலியான ஹெய்டனை நவம்பர் 29, 2025 அன்று கரம்பிடித்தார்.62 வயதில் திருமணம் செய்துகொண்ட அல்பானீஸ், ஆஸ்திரேலிய வரலாற்றில் பதவியில் இருக்கும் காலத்த... மேலும் பார்க்க

``கணவன் கோபமாக இருந்தால் எதுவும் சொல்லாதீர்கள்''- வைரலாகும் தோனியின் அறிவுரை

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சமீபத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். இத்திருமணத்தில் மகேந்திர சிங் தோனி பேசுகையில் நகைச்சுவையாக பேசினார். அவர் மணமக்களுக்கு வழங்கிய அ... மேலும் பார்க்க

NMMK: மங்களதேவி கண்ணகி கோயில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ( NMMK) சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மங்களதேவி கண்ணகி கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்... மேலும் பார்க்க

சிறுத்தையை பிடிக்க வைத்திருந்த கூண்டு; குடிபோதையில் நுழைந்த வாலிபர் - கதவு மூடிக்கொண்டதால் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள உம்ரி தெஹாலோ என்ற கிராமத்தில் சிறுத்தைகள் அடிக்கடி பொதுமக்கள் குடியிருப்புக்குள் புகுந்து மக்களை தாக்க ஆரம்பித்தது. ஒரு பெண்ணை சிறுத்தை அடித்து கொன்று இ... மேலும் பார்க்க