செய்திகள் :

”SIR கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறப் போவதில்லை” - சொல்கிறார் துரை வைகோ

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.கவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, “த.வெ.கவில் இணைய செங்கோட்டையன் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை. அவர் இணைவதால், அக்கட்சிக்கு பலமா? பலவீனமா? என்பதை வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி பெறும் வாக்குகளைப் பொறுத்துதான் சொல்ல முடியும். அ.தி.மு.கவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் இரண்டாவது கட்சியாக வர வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் ஆசை.

துரை வைகோ

அந்த ஆசை இன்றல்ல, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகே அ.தி.மு.கவை பிளவுபடுத்தினர்.  ஒரு இயக்கத்தின் அடையாளம் என்பதே அக்கட்சியின் கொடி, சின்னம்தான். எங்களுடைய சின்னத்தில் தேர்தலில் நிற்க வேண்டும் என்பது ம.தி.மு.க தொண்டர்களின் விருப்பம். இதுகுறித்து கூட்டணி பேச்சுவார்த்தையின் போது சுமுகமாக பேசி முடிவு எடுக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க போட்டியிட விரும்பினால் அதனை  கட்சியின் தலைமை பரிசீலனை செய்யும்.

எஸ்.ஐ.ஆரை தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்க்கின்றன. அதை அமல்படுத்தும் முறையையும் எதிர்க்கிறோம். எஸ்.ஐ.ஆர் பணியால் அரசு ஊழியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும் 16-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். எஸ்.ஐ.ஆர் எதற்காக கொண்டு வரப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறப்போவதில்லை.

துரை வைகோ

எஸ்.ஐ.ஆருக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுத்துள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மதுரை, கோவையில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என, வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அப்படி என்றால், பிற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், நீங்கள் கொடுக்க மாட்டீர்களா? அதிலேயே அவர்களின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்,” என்றார்.  

சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.அதனைத்தொடர்ந்து எடப... மேலும் பார்க்க

தேர்வு அறையில் செல்போன்; விடைத்தாளை `ஸ்டேட்டஸ்’ வைத்த மாணவர்! - புதுச்சேரி பல்கலைக்கழக அவலம்

காரைக்கால், மாஹே, அந்தமான்–நிக்கோபார், லக்‌ஷதீப் என நான்கு கிளைகளுடன் புதுச்சேரி கலாபட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகி... மேலும் பார்க்க

பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

கொங்கு மண்டலம்2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. செங்கோட்டையன் தவெக வருகைக்கு பிறகு கொங்கு மண்டல அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே அதிமுக வலுவ... மேலும் பார்க்க

தவெக: "இதற்கு பதில் கூறினால் பிரச்னைகள் வரும்!" - செங்கோட்டையன்

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அம... மேலும் பார்க்க

'வார்த்தை'யால் வந்த வினை; மோதிக்கொள்ளும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் - என்ன பிரச்னை?

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இது தான் கர்நாடகா அரசின் தலைமைக்கான இப்போதைய போட்டிக்கு அடிப்படை காரணம். உறுதி 2023-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் வெற்றியின் போது... மேலும் பார்க்க