செய்திகள் :

'வார்த்தை'யால் வந்த வினை; மோதிக்கொள்ளும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் - என்ன பிரச்னை?

post image

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இது தான் கர்நாடகா அரசின் தலைமைக்கான இப்போதைய போட்டிக்கு அடிப்படை காரணம்.

உறுதி

2023-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் வெற்றியின் போது, முதல் இரண்டரை ஆண்டு கர்நாடகாவின் முதலமைச்சராக தற்போதைய முதலமைச்சர் சித்தராமையா இருப்பார் என்றும்... அடுத்த இரண்டரை ஆண்டுகள் கர்நாடகாவின் முதலமைச்சராக தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இருப்பார் என்றும் காங்கிரஸ் மேலிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. கர்நாடகா முதலமைச்சர் ஆவதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் டி.கே.சிவக்குமார். ஆனால், முதலமைச்சராகவே தொடர சித்தராமையா விரும்புகிறார்.

இந்தப் பிரச்னை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியே தெரிய ஆரம்பித்தது. இருந்தும், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் ஒற்றுமையாக இருப்பதுபோல காட்டிக்கொண்டனர்.

ஆனால், இப்போது இருவரும் பொதுவெளியில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

டி.கே.சிவக்குமார் பேசியது என்ன?

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் , "வார்த்தையின் சக்தி தான் உலகத்தின் சக்தி என்று கூறுவார்கள். சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிகப்பெரிய சக்தி ஆகும்" என்று பேசியிருந்தார்.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா
சித்தராமையா

சித்தராமையா பதிவு

இதற்கு பதிலடி தரும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா, "உலகத்தை மக்களுக்காக மேம்படுத்தாது என்றால் வார்த்தை ஒரு சக்தி இல்லை.

கர்நாடகா மக்கள் தந்திருக்கும் தீர்ப்பு நொடிக்கானது அல்ல... அது ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் பொறுப்பிற்கானது. நான் உள்பட அனைத்து காங்கிரஸாரும் மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் பணிபுரிந்து வருகிறோம்.

கர்நாடகாவிற்கான எங்களது வார்த்தை முழக்கம் அல்ல... அது எங்களுக்கு உலகம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த 'வார்த்தை' போரை காங்கிரஸ் மேலிடம் எப்படி சரிசெய்ய போகிறதோ?

மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் - ஆளும் கூட்டணியிலும் பஞ்சாயத்து?

மகாராஷ்டிராவில் வரும் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அக... மேலும் பார்க்க

Imran Khan:``இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா?" - பாகிஸ்தான் அரசு கூறும் பதில் என்ன?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களை ஒப்படைக்காமை, நிலம் தொடர்பான ஊழல் வழக்குகளில் ந... மேலும் பார்க்க

காங்கிரஸ்: "ஆட்சியில் பங்கு; தலைமை தான் முடிவெடுக்கும்!" - காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி, திரு... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு: பெண் காவலர் பலி; `பைடன்தான் காரணம்' -ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில், தேசிய காவல்படை உறுப்பினர்களான சிறப்பு நிபுணர் சாரா பெக்ஸ்ட்ரோம், ஸ்டாஃப் சார்ஜென்ட் ஆண்ட்ரூ வுல்ஃப் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.அப... மேலும் பார்க்க

TVK Vijay: `அதிருப்தி அணி, பாஜக-வுக்கு நோ!' - தவெக-வில் ஐக்கியமான செங்கோட்டையன்; பின்னணி என்ன?

எடப்பாடி Vs செங்கோட்டையன்எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சக்திவாய்ந்த தலைவராகச் செங்கோட்டையன் இருந்து வந்தார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்தபிறகு செங்கோட்டையனின் முக... மேலும் பார்க்க

``DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும்" - உதயநிதி விழாவில் கமல்

தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்... மேலும் பார்க்க