செய்திகள் :

வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு: பெண் காவலர் பலி; `பைடன்தான் காரணம்' -ட்ரம்ப் குற்றச்சாட்டு

post image

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில், தேசிய காவல்படை உறுப்பினர்களான சிறப்பு நிபுணர் சாரா பெக்ஸ்ட்ரோம், ஸ்டாஃப் சார்ஜென்ட் ஆண்ட்ரூ வுல்ஃப் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரு பாதுகாப்பு வீரர்களும் கடுமையாகக் காயமடைந்தனர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சாரா பெக்ஸ்ட்ரோம் உயிரிழந்தார். மற்றொரு காவல்துறை நிபுணர் சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிலையில், வெள்ளை மாளிகை அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியான செய்தியில், இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா (29). இவர் 2021-ல் அமெரிக்காவில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் பயங்கரவாதச் செயல் குற்றச்சாட்டில் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) விசாரணையில் இருக்கிறார்.

பலியான சாரா பெக்ஸ்ட்ரோம்
பலியான சாரா பெக்ஸ்ட்ரோம்

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், அகதிகள் வருகையைக் காட்டும் ஒரு விமானப் படத்தைக் காட்டி, "மிகவும் ஆபத்தான மற்றும் குற்றப் பின்னணி கொண்ட மக்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு வந்தார்கள். அமெரிக்கா விரும்பும் தகுதியான நல்லவர்கள் அல்ல.

தற்போது இந்த நிலைமை குழப்பமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தேக நபர் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவர். அவரை ஜோ பைடன் அரசுதான் இங்குக் கொண்டு வந்தது.

அமெரிக்காவுக்குள் வரும் மக்களைக் கட்டுப்படுத்துவதைவிடப் பெரிய பாதுகாப்புப் பிரச்னை எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால், இப்படிப்பட்டவர்களை நாங்கள் இங்கு விரும்பவில்லை" என்றார்.

Imran Khan:``இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா?" - பாகிஸ்தான் அரசு கூறும் பதில் என்ன?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களை ஒப்படைக்காமை, நிலம் தொடர்பான ஊழல் வழக்குகளில் ந... மேலும் பார்க்க

காங்கிரஸ்: "ஆட்சியில் பங்கு; தலைமை தான் முடிவெடுக்கும்!" - காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி, திரு... மேலும் பார்க்க

TVK Vijay: `அதிருப்தி அணி, பாஜக-வுக்கு நோ!' - தவெக-வில் ஐக்கியமான செங்கோட்டையன்; பின்னணி என்ன?

எடப்பாடி Vs செங்கோட்டையன்எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சக்திவாய்ந்த தலைவராகச் செங்கோட்டையன் இருந்து வந்தார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்தபிறகு செங்கோட்டையனின் முக... மேலும் பார்க்க

``DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும்" - உதயநிதி விழாவில் கமல்

தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்... மேலும் பார்க்க