செய்திகள் :

Imran Khan:``இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா?" - பாகிஸ்தான் அரசு கூறும் பதில் என்ன?

post image

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களை ஒப்படைக்காமை, நிலம் தொடர்பான ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த வாரம் இம்ரான் கானைச் சந்திக்க அவரது சகோதரிகள் அடியாலா சிறைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் காவல்துறையால் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், இம்ரான் கானைச் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் சகோதரிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.

இம்ரான் கானின் சகோதரிகள்
இம்ரான் கானின் சகோதரிகள்

அப்போது, "இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா என்பதைக் எங்களுக்குத் தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்தும் எங்களுக்கு அச்சம் உள்ளது. அவரைச் சந்திக்க முயன்றபோது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதனால் காவல்துறைக்கு எதிராகக் கோஷம் எழுப்பினோம். அப்போது தெருவில் விளக்குகள் அணைக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டோம்," எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக இம்ரான் கானைச் சந்திக்க முடியவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அடியாலா சிறை நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டி சிறைக்குள் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.

அடியாலா சிறையிலிருந்து அவர் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," எனக் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்

அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், "முன்னாள் பிரதமர் முந்தைய கைதிகள் எதிர்கொண்டதைவிட மிகவும் வசதியான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்படும் உணவின் மெனுவைப் பாருங்கள் – அது ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காது.

அவருக்கு ஒரு தொலைக்காட்சி, உடற்பயிற்சி உபகரணங்கள், இரட்டைப் படுக்கை, வெல்வெட் மெத்தை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. நான் சிறையில் இருந்தபோது குளிர்ந்த தரையில் தூங்கினோம், சிறை உணவைச் சாப்பிட்டோம், சூடான நீரும் கொடுக்கப்படவில்லை. இரண்டு போர்வைகள் மட்டுமே இருந்தன," எனத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ்: "ஆட்சியில் பங்கு; தலைமை தான் முடிவெடுக்கும்!" - காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி, திரு... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு: பெண் காவலர் பலி; `பைடன்தான் காரணம்' -ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில், தேசிய காவல்படை உறுப்பினர்களான சிறப்பு நிபுணர் சாரா பெக்ஸ்ட்ரோம், ஸ்டாஃப் சார்ஜென்ட் ஆண்ட்ரூ வுல்ஃப் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.அப... மேலும் பார்க்க

TVK Vijay: `அதிருப்தி அணி, பாஜக-வுக்கு நோ!' - தவெக-வில் ஐக்கியமான செங்கோட்டையன்; பின்னணி என்ன?

எடப்பாடி Vs செங்கோட்டையன்எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சக்திவாய்ந்த தலைவராகச் செங்கோட்டையன் இருந்து வந்தார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்தபிறகு செங்கோட்டையனின் முக... மேலும் பார்க்க

``DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும்" - உதயநிதி விழாவில் கமல்

தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்... மேலும் பார்க்க