செய்திகள் :

Sky Dining: கிரேனில் 150 அடி உயரத்தில் சாப்பாட்டு மேசையுடன் தொங்கிய குடும்பம்; போராடி மீட்பு!

post image

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. மூணாறை அடுத்த ஆனச்சல் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று 'ஸ்கை டைனிங்' என்ற பெயரில் வித்தியாசமான சாப்பாடு முறையை செயல்படுத்தி வருகிறது. அதில் டைனிங் டேபிள், இருக்கைகளும் சேர்ந்திருக்கும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இருக்கையில் வாடிக்கையாளர்களை அமரவைத்து உணவு பதார்த்தங்கள் வைக்கப்படும். பின்னர் வாடிக்கையாளர்களுடன் டைனிங் டேபிளையும் சேர்த்து கிரேன் மூலம் ஆகாயத்தில் சுமார் 150 அடி உயரத்தில் தூக்கி நிறுத்துவார்கள். அங்கு வைத்து அவர்களுக்கு உணவு பரிமாறப்படும். சுற்றிலும் உள்ள இயற்கையை ரசித்தபடி வாடிக்கையாளர்கள் உணவருந்தலாம். இது புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் என்பதால் மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த ஹோட்டலுக்கு விரும்பிச் செல்கின்றனர். கண்ணூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் 2 குழந்தைகளுடன் 'ஸ்கை டைனிங்'கில்  4 பேர் இன்று மதியம் சாப்பிடச் சென்றுள்ளனர். அதில் 2 வயது குழந்தையும், 4 வயதுடைய மற்றொரு குழந்தையும் இருந்தது. மேலும், ஹோட்டல் ஊழியர் ஒருவரும் உடன் இருந்தார்.

குழந்தையை மீட்கும் தீயணைப்பு வீரர்

5 பேரையும் சேர்த்து கிரேன் மேலே தூக்கி உயர்த்தியது. அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு கீழே இறக்க முயன்றபோது கிரேன் பழுதாகிவிட்டது. வாடிக்கையாளர்களை கீழே இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஹோட்டல் நிர்வாகம் கிரேனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றது. அந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடினர். நேரம் அதிகமாக ஆகியும் கிரேனை சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்கை டைனிங் கிரேனில் சிக்கிய குடும்பம்

தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்கை டைனிங்கின் கீழ் பகுதியில் ஆபத்து காலத்தில் பயன்படுத்தும் வலை விரித்தனர். ஏணி மூலம் மீட்க வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்தனர். அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மேலே சென்று குழந்தைகள் உட்பட 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் 3 மணிநேரம் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டிச் சென்றனர்.

கோவா தீ விபத்து: `எப்படியும் போனை எடுத்து பேசுவார்னு நினச்சேன்’ - கணவன், 3 சகோதரிகளை பறிகொடுத்த பெண்

கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிக... மேலும் பார்க்க

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேனில்' நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்... மேலும் பார்க்க

கோவா: நைட் கிளப்பில் தீ‌ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்‌பற்றியது எப்படி?

நேற்று நள்ளிரவு, கோவா ஆர்போராவில் உள்ள ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 22 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.என்ன ந... மேலும் பார்க்க

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் ... மேலும் பார்க்க

கீழக்கரையில் கொடூர விபத்து: நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரி... மேலும் பார்க்க

MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்... மேலும் பார்க்க