செய்திகள் :

TASMAC: `ஆன்லைனில் பேமென்ட் தான் செய்ய முடியும்; கடைகளில் தான் டெலிவரி' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

post image

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ்.

அவரிடம் ஆன்லைன் மதுபான விற்பனை உள்ளிட்ட டாஸ்மாக் சம்பந்தமான பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு அவருடைய பதில்கள்...

மதுபானஆன்லைன் ஆர்டர்?

ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை. அது ஆன்லைன் விற்பனை கிடையாது. அது ஒரு டிஜிட்டல் பேமென்ட் முறை மட்டுமே.

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ கசிந்ததால், 'ஹோம் டெலிவரி' என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் எந்தக் கடையில் என்னென்ன மதுபான வகைகள் இருப்பில் உள்ளன என்பதை மக்கள் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம். இது அரசு நிர்வாகத்திலும், கடைகளிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும்.

மதுபான விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. விலையை உயர்த்தி வருவாயைப் பெருக்குவதை விட, இந்தத் துறையில் பல ஆண்டுகளாக நடக்கும் ஊழல்களைக் கண்டறிந்து தடுத்தாலே, அரசுக்கான வருவாய் தானாகவே அதிகரிக்கும். கடந்த ஆண்டு ரூ.51,000 கோடியாக இருந்த வருவாய் இலக்கை, இந்த ஆண்டு ரூ.55,000 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

கூடுதல் 10 ரூபாய்?

இந்த 10 ரூபாய் கூடுதல் வசூல் என்பது இன்று நேற்றல்ல, 2011-ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருக்கிறது. ஊழியர்களுக்கு ஏற்படும் ஏற்றி இறக்கும் கூலி, மின்சாரக் கட்டணம், கடை வாடகை போன்ற செலவுகளுக்காக இதை வாங்குவதாகக் கூறுகிறார்கள். இப்போது அரசு அந்தச் சுமைகளை ஊழியர்கள் மீது சுமத்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கியமாக, ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ (ESI) வசதி செய்து தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதன் மூலம், நுகர்வோரிடம் இருந்து கூடுதலாகப் பணம் வசூலிப்பது முழுமையாகத் தடுக்கப்படும்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

மேலும் கடைகள் மூடல்?

ஏற்கனவே 717 கடைகளை மூடியிருக்கிறோம். பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் பெண்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் புகாருக்குள்ளாகும் கடைகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் செய்வது விற்பனையை அதிகரிப்பதற்கான வளர்ச்சி அல்ல, மாறாக இந்தத் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் மட்டுமே. மக்கள் படும் சிரமங்களை அரசு உணர்ந்துள்ளது, அவை படிப்படியாகச் சரி செய்யப்படும்."

தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில், காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசையும், முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உதயநிதி பேசியது சர்ச்சையானது. அவர் இ... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: "பழைய பட்ஜெட் புத்தகத்தையே திருப்பி வாசித்திருக்கின்றனர்" - MRK பன்னீர்செல்வம்

இன்று தங்களுடைய முதல் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு. இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புகளைச் சாடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு வேளாண் துறையின் முன்னாள் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்?

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன்2026தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி,மே மாதம்13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அன்றைய தினம் அவருடன் இரண்டு அமைச்சர்களும்,ஜூன்17-ம் தேதி மூன்று அமைச்சர்களும் பதவிய... மேலும் பார்க்க

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த சேகர் பாபு - தடுத்து நிறுத்திய போலீஸ்

ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வந... மேலும் பார்க்க

சர்ச்சை மேல் சர்ச்சை; மேலிடத்தை தூங்கவிடாமல் செய்யும் விருதுநகர் தவெக! - சாட்டை சுழற்றுவாரா விஜய்?

ஆட்சி அமைத்து முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது தமிழக வெற்றிக் கழக அரசு.அடுத்து திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கிற சூழலில், ஆட்சி அமைந்த இந்த மூன்று மாதங்... மேலும் பார்க்க

'கடைகளில் UPI பயன்படுத்தி பணம் செலுத்துகிறீர்களா?' - அதற்கு இனி மத்திய அரசு கட்டணம் வசூலிக்கலாம்

இதுவரை Paytm, கூகுள் பே, போன் பே மூலம் பேமெண்ட் செய்யும் போது, நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. இனி வசூலிக்கப்படலாம். இதற்கு காரணம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4), மத்திய நிதியமைச்... மேலும் பார்க்க