செய்திகள் :

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்?

post image

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன் 2026 தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி, மே மாதம் 13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அன்றைய தினம் அவருடன் இரண்டு அமைச்சர்களும், ஜூன் 17-ம் தேதி மூன்று அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால் அவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அமைதியாக இருந்த முதல்வர் ரங்கசாமியை காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

அதையடுத்து கடந்த ஜூலை 20-ம் தேதி ஆளுநர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியலை அளித்தார். வழக்கமாக ஆளுநரிடம் வழங்கப்படும் இலாகாப் பட்டியல் ஒரு மணி நேரத்தில் வெளியாகிவிடும்.

அமைச்சர்களுடன் அளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி
அமைச்சர்களுடன் அளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி

ஆனால் இந்த முறை அறிவிப்பு தாமதமாவதற்கு, ஆளுநர் கைலாஷ்நாதன்தான் காரணம் என்று குற்றம் சுமத்தினர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர். அதாவது, அமைச்சர் நமச்சிவாயத்திற்காக பா.ஜ.க கேட்கும் இலாகாக்களை முதல்வர் ரங்கசாமி கொடுக்காததால், ஆளுநர் இலாகா அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டின் பின்னணி.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறையை ஒதுக்கி ரங்கசாமி கொடுத்த பட்டியல், நேற்று இரவே அரசிதழில் வெளியானது. அதன்மூலம் முதல்வர் ரங்கசாமி முதல் அனைவருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

முதல்வர் ரங்கசாமிக்கு திட்டம் மற்றும் நிதித்துறை, பொது நிர்வாகம், சுகாதாரத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், வருவாய் மற்றும் கலால், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வஃபு வாரியம், உள்ளாட்சி நிர்வாகம், போக்குவரத்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், கிராமம் மற்றும் நகரமைப்பு, தீயணைப்பு, செய்தி மற்றும் விளம்பரத்துறை போன்ற இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல, பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, உள்துறை, மின்சாரம், கல்வித்துறை, வனம் மற்றும் வனவிலங்குத்துறை போன்றவை ஒதுக்கப்பட்டிருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலம் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ரங்கசாமி, கைலாஷ்நாதன்
ரங்கசாமி, கைலாஷ்நாதன்

அதேபோல என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் ராஜவேலுக்கு, ஆதிதிராவிடர் நலம், கலை மற்றும் பண்பாடு, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள், அரசு அச்சகம், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்துக்கு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் நலன் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

காரைக்காலைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் ஜி.என்.எஸ் ராஜசேகரனுக்கு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்டத் துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

TASMAC: `ஆன்லைனில் பேமென்ட் தான் செய்ய முடியும்; கடைகளில் தான் டெலிவரி' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ். அவர... மேலும் பார்க்க

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த சேகர் பாபு - தடுத்து நிறுத்திய போலீஸ்

ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வந... மேலும் பார்க்க

சர்ச்சை மேல் சர்ச்சை; மேலிடத்தை தூங்கவிடாமல் செய்யும் விருதுநகர் தவெக! - சாட்டை சுழற்றுவாரா விஜய்?

ஆட்சி அமைத்து முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது தமிழக வெற்றிக் கழக அரசு.அடுத்து திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கிற சூழலில், ஆட்சி அமைந்த இந்த மூன்று மாதங்... மேலும் பார்க்க

'கடைகளில் UPI பயன்படுத்தி பணம் செலுத்துகிறீர்களா?' - அதற்கு இனி மத்திய அரசு கட்டணம் வசூலிக்கலாம்

இதுவரை Paytm, கூகுள் பே, போன் பே மூலம் பேமெண்ட் செய்யும் போது, நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. இனி வசூலிக்கப்படலாம். இதற்கு காரணம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4), மத்திய நிதியமைச்... மேலும் பார்க்க

'எத்தனை நாளுக்குதான் சேகர் பாபுவே.!' - அங்கலாய்த்த திமுக எம்.எல்.ஏ; சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி சட்டமன்ற வளாகத்தில் இன்றைய நாளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு இங்கே.!Udhayanidhi> திமுக-வினர் கருப்பு சட்டையு... மேலும் பார்க்க

`தி.மு.கவுக்கு தாவுகிறாரா கே.டி ராஜேந்திர பாலாஜி?' - பரபரக்கும் விருதுநகர் அரசியல்

விருதுநகர் அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி திமுக-வுக்கு தாவ ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலால் விருதுநகர் பரபரத்து கிடக்கிறது. முன்னாள் அமைச்சர் க... மேலும் பார்க்க