செய்திகள் :

Toxic: "'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று சொல்லலாம்; ஆனால்..." - விஜய் குறித்து யஷ்

post image

‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நேற்று (ஆகஸ்ட்.24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய யஷ், "இந்த அன்பிற்கு நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இப்போது 'என் ரத்தத்தில் ரத்தமான' என்று சொல்லலாம் என்றால் அதை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார்.

'என்னை வாழவைத்த தெய்வங்களே' என்று சொல்லலாம் என்றால் தலைவர் ரஜினிகாந்த் சார் சொல்லிவிட்டார்.

யஷ்
யஷ்

'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று சொல்லலாம் என்றால் தளபதி விஜய் சார் சொல்லிவிட்டார். அதனால், 'என்னைத் தத்தெடுத்த தமிழ்மக்களே' என்கிறேன்.

இந்தச் சமயத்தில் தமிழ் மக்களுக்கு நான் உண்மையிலேயே சல்யூட் செய்கிறேன். 'ஜன நாயகன்' படம் நெட்டில் லீக் ஆனபோது தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் அது எவ்வளவு பெரிய வேதனை என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த தயாரிப்பாளருக்காகவும், விஜய் சார் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்காகவும், லீக் ஆன பிறகும் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்து உழைப்பை மதித்தீர்கள்.

சினிமாவையும் அதன் பின்னணியில் உள்ள உழைப்பையும் மதித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

விஜய் சாரின் அர்ப்பணிப்பைப் பார்த்து பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

யஷ்
யஷ்

மக்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அவர் தமிழக மக்களுக்காகக் காட்டும் அர்ப்பணிப்பு அளப்பரியது.

மக்கள் கொடுத்த அன்பைத் திருப்பித் தரும் நிலைக்கு அவர் வந்திருக்கிறார். அவரது புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள். நாங்கள் சாதாரண மனிதர்கள்.

மக்கள்தான் எங்களை ஹீரோவாக ஆக்குகிறார்கள். அவர்களை மகிழ்விப்பது மட்டுமே எங்கள் கடமை. தொடர்ந்து மக்களை மகிழ்விப்போம்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Toxic: "தமிழ்நாட்டு மக்கள் காட்டும் அன்புக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது" - ருக்மணி வசந்த்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

தசாவதாரம் : தொழில்நுட்ப சாகசம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 18

`சினி'ஸ்கோப் 18தசாவதாரம் :சினிமாவின் தேவை என்ன? அதன் நோக்கம் என்ன? ஒரு சினிமா நமக்கு என்ன தருகிறது? முதலாவதும் முக்கியமானதும் ஆவது பொழுதுபோக்கு (Entertainment). பொழுதுபோக்கு என்பதை விடவும், எண்டர்டெயி... மேலும் பார்க்க

Paal Dabba: "த்ரிஷா மேடம் என் பாடலில் நடிக்க சம்மதித்ததே சிறப்பான ஒன்று!" - பால் டப்பா ஷேரிங்ஸ்

சுயாதீன இசைத்துறையில் பரபரப்பாக இயங்கி வரும் முக்கியமான குரல் `பால் டப்பா'. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் பாடல்கள் செய்து வருகிறார். மற்றொரு பக்கம் தன்னுடைய அடுத்தடுத்த சுயாதீன பாட... மேலும் பார்க்க

"வாட்டர் கேன் போட்டிருக்கேன்; காஃபி டே-ல வேலை பார்த்திருக்கேன்" - 'மொத ராத்திரி' ரிஷிகாந்த்

நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் 'மொத ராத்திரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்திரு... மேலும் பார்க்க

`என் விசுவாசத்தைப் பார்த்து தனிக்கடை வச்சுக் கொடுத்திருக்கார் முதலாளி!' - 'காதல்' கரட்டாண்டி அருண்

'காதல்' படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் சிறுவன் கரட்டாண்டியாக நடித்தவர் அருண். அந்தப் படத்தின் ரீச் மூலம் 'சிவகாசி' உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்தார். பிறகு திரையில் ஆளை... மேலும் பார்க்க

Once More: "என் வாழ்க்கையில் கடினமான காலக்கட்டத்தில் இருந்தபோது தான்.!"- அதிதி ஷங்கர் ஷேரிங்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடித்துள்ள படம் 'ஒன்ஸ் மோர்'. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.... மேலும் பார்க்க