செய்திகள் :

Tuvalu: சில ஆண்டுகளில் மூழ்கிவிடும்; அடையாளம் அழியாது! - குட்டி நாட்டின் முயற்சி; உதவும் ஆஸ்திரேலியா

post image

காலநிலை மாற்றத்தால் முழுமையாக அழியும் அபாயத்தில் உள்ள ஒரு நாடு, தன்னை ‘டிஜிட்டல் நாடாக’ மாற்றிக் கொண்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதுகிறது. அந்த நாடு தான் பசிபிக் பெருங்கடலின் நடுவே அமைந்துள்ள மிகச் சிறிய தீவு நாடான 'துவாலு'.

மிகக் குறைவான மக்களால் மட்டுமே அறியப்பட்ட இந்த நாடு, இன்றைக்கு உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Tuvalu - துவாலு
Tuvalu - துவாலு

காரணம், காலநிலை மாற்றத்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாடு முழுவதுமாகக் கடலுக்குள் மூழ்கி மறைந்து போகும் அபாயம் உள்ளது.

துவாலு, ஒன்பது சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. கடல் மட்டத்திலிருந்து வெறும் ஒன்று அல்லது இரண்டு மீட்டர் உயரத்தில் மட்டுமே இந்த தீவுகள் அமைந்துள்ளன. இதுவே துவாலு எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயமாக உள்ளது. உலக வெப்பமயமாதலின் காரணமாக கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக, துவாலுவின் நிலப்பரப்பு மெதுவாகக் கடலால் விழுங்கப்பட்டு வருகிறது.

துவாலு சந்திக்கும் பிரச்னைகள்

சுமார் 11,000 மக்கள் மட்டுமே துவாலுவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் மீன்பிடிப்பு, விவசாயம் மற்றும் அரசாங்க வேலைகளைச் சார்ந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டம் உயர்வதால், கடல் நீர் குடிநீரில் ஊடுருவி உப்புக் கலப்பது, விவசாய நிலங்கள் சேதமடைவது போன்ற கடுமையான பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும், புயல்கள் மற்றும் பெரும் அலைகளால் சில பகுதிகள் ஏற்கனவே கடலுக்குள் மூழ்கிவிட்டன. நிலப்பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், எதிர்காலத்தில் துவாலு மக்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

Tuvalu - துவாலு
Tuvalu - துவாலு

உலகின் முதல் ‘டிஜிட்டல் நாடு’

இந்த அச்சுறுத்தலான சூழ்நிலையிலும் துவாலு ஒரு அதிசயமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. தங்கள் நாடு அழிந்தாலும், அதன் அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் முயற்சியில் துவாலு ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தங்கள் நாட்டின் நில வரைபடங்கள், அரசு ஆவணங்கள், சட்டங்கள், மக்களின் பதிவுகள், மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவை 3D மாடல்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் உதவி

துவாலுவும் ஆஸ்திரேலியாவும் 2023-ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ‘பாலெபிலி யூனியன்’ எனப்படும் இந்த ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் 280 வரை துவாலு குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதி வழங்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் இடம்பெயர்வை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்ட உலகின் முதல் ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது. இது துவாலு மக்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதே நிலையை எதிர்கொள்ளும் பல நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

துவாலு - இருப்பிடம்
துவாலு - இருப்பிடம்

துவாலு உலகிற்கு சொல்லும் செய்தி

இன்றைக்கு இந்தச் சிறிய தீவு நாடான துவாலு சந்திக்கும் பிரச்னைகள், நாளை உலகின் பல கடலோரத் தீவுகள் மற்றும் நாடுகள் சந்திக்கப்போகும் ஒரு எச்சரிக்கையாகும். காலநிலை மாற்றம் நாளை வரும் அபாயம் அல்ல; இன்றே உலகின் ஒரு நாட்டை அழித்துக்கொண்டிருக்கும் உண்மை என்பதை துவாலு உலகிற்கு உணர்த்துகிறது.!

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க