செய்திகள் :

US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்... உண்மை என்ன?

post image

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு.

7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

நாடு திரும்பும் இந்தியர்கள் இன்று காலையே பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மதிய வேளையில் சுமார் 2 மணியளவில் சி17 விமானம் தரையிறங்கியுள்ளது.

சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து அமெரிக்க விமானங்கள் புறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி வந்தது முதலே கைதிகளைப் போல குடியேறிகள் கைவிலங்கிட்டு, கால்களிலும் விலங்கிடப்பட்டு, முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

நெட்டிசன்கள் பலரும் இந்தியர்களை அமெரிக்கா மரியாதையுடன் நடத்தவில்லை என்றும் தீவிரவாதிகளைப் போல நடத்துகின்றனர் என்றும் என அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் இந்தியர்கள் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னணி பத்திரிகையாளர் முகமது ஜுபிர், "இந்தியர்கள் USA -விலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. செய்தி சேனல்களும் சில சமூக வலைத்தள பக்கங்களும் அமெரிக்க குடியேறிகள் கைகளில் விலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதைக் காட்டுகின்றன. ஆனால் வைரலான அந்த புகைப்படங்கள், குவாத்தமாலா, ஈக்வடார் மற்றும் கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் புகைப்படங்கள். செய்திகள் கூறுவதைப்போல இந்தியர்களுடையவை அல்ல" என தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்களும் அந்த புகைப்படங்களில் இருப்பது இந்தியர்கள் அல்ல என்பதை உறுதி செய்துள்ளன. கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் முதலில் எங்கே வெளியிடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்!

104 இந்தியர்கள் இன்று நாடுகடத்தப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் இந்திய வெளியுறவுத்துறையும், அமெரிக்க அரசும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

திருநெல்வேலி: நாளை முதல்வர் திறக்க உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்! | Photo Album

நெல்லையில் திறப்பு விழா காணும் பிரமாண்டமான பாளையங்கோட்டை ஸ்மார்ட் சிட்டி மகாத்மா காந்தி மார்க்கெட்.! மேலும் பார்க்க

மோடி சொல்வதை இனி ஆளுநர் கேட்பாரா? Parliament Highlights | Delhi Election | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* மகா கும்பமேளாவில் இன்று நீராடிய பிரதமர் மோடி. * கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?* ராகுலை மறைமுகமாக விமர்சித்த மோடி! * ராகுல் மீது உரிமை மீற... மேலும் பார்க்க

``முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை..'' -தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விளக்கம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (பிப்ரவரி 5) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார்.அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வேல்முருகன், “முதலில் 21 வன்னிய போராளிக... மேலும் பார்க்க

Kumbh Mela: ``இது தெய்வீக இணைப்பின் தருணம்..'' -கும்பமேளாவில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இக்கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.... மேலும் பார்க்க

Doctor Vikatan: காபி குடித்தால் தலைவலி சரியாவது உண்மையா, பழக்கத்தின் காரணமாக உணரப்படுவதா?

Doctor Vikatan: தலைவலித்தால் சூடாக காபியோ, டீயோ குடிப்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறோம். உண்மையிலேயே சூடான காபி, டீக்கு தலைவலியைப் போக்கும் குணம் உண்டா அல்லது அது பழக்கத்தின் காரணமாக உணரப்படுகிறவ... மேலும் பார்க்க

USA: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அமெரிக்கா... இந்தியாவின் முடிவு என்ன?

தேர்தல் பிரச்சாரத்தின் போது, "வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது" என ட்ரம்ப் தெரி... மேலும் பார்க்க