செய்திகள் :

US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்... உண்மை என்ன?

post image

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு.

7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

நாடு திரும்பும் இந்தியர்கள் இன்று காலையே பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மதிய வேளையில் சுமார் 2 மணியளவில் சி17 விமானம் தரையிறங்கியுள்ளது.

சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து அமெரிக்க விமானங்கள் புறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி வந்தது முதலே கைதிகளைப் போல குடியேறிகள் கைவிலங்கிட்டு, கால்களிலும் விலங்கிடப்பட்டு, முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

நெட்டிசன்கள் பலரும் இந்தியர்களை அமெரிக்கா மரியாதையுடன் நடத்தவில்லை என்றும் தீவிரவாதிகளைப் போல நடத்துகின்றனர் என்றும் என அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் இந்தியர்கள் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னணி பத்திரிகையாளர் முகமது ஜுபிர், "இந்தியர்கள் USA -விலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. செய்தி சேனல்களும் சில சமூக வலைத்தள பக்கங்களும் அமெரிக்க குடியேறிகள் கைகளில் விலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதைக் காட்டுகின்றன. ஆனால் வைரலான அந்த புகைப்படங்கள், குவாத்தமாலா, ஈக்வடார் மற்றும் கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் புகைப்படங்கள். செய்திகள் கூறுவதைப்போல இந்தியர்களுடையவை அல்ல" என தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்களும் அந்த புகைப்படங்களில் இருப்பது இந்தியர்கள் அல்ல என்பதை உறுதி செய்துள்ளன. கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் முதலில் எங்கே வெளியிடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்!

104 இந்தியர்கள் இன்று நாடுகடத்தப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் இந்திய வெளியுறவுத்துறையும், அமெரிக்க அரசும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

`J&K பிரிவு 370-ஐ நீக்க உதவியவர்' புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்வான ஞானேஷ் குமார்.. யார்?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் ஆகிய இருவரில் ஞானேஷ் குமார் (61)... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கவே மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது..!” -காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை இணைந்து சமூக நல்லிணக்க மிலாது விழா மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவை திருச்சியில் நடத்தியது. இவ்விழாவில், இந்... மேலும் பார்க்க

``மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் அரசியலில் இல்லை... நான் சாதாரண தொண்டன்!'' -செங்கோட்டையன்

திருச்சி, ஸ்ரீரங்கத்துக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புது கேள்விகள் எல்லாம் கேட்டால் நான் எப்படி பதில் கூறுவது?,... மேலும் பார்க்க

Health: கீரை, காய், பழம்... ஒரு கப் சூப்; உடம்புக்கு நல்லது!

சூப், பசியைத் தூண்டக்கூடியது. உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப் வகைகளைக் குடிக்கலாம். சிறுநீரகக் கோளாறு, அல்சர் பிரச்னை உள்ளவர்கள் மசாலா சேர்ந்த சூப்க... மேலும் பார்க்க

`Vikatan இணையதள முடக்கத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்' -சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவிப்பு!

விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்!விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்... மேலும் பார்க்க

DOGE: `இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ரூ.182 கோடி ரத்து' -அமெரிக்க நிதி நிறுத்தப்பட்ட பிற நாடுகள் எவை?

அமெரிக்காவில் எலான் மஸ்க் தலைமையில் செயல்படும் அரசு செயல்திறன் துறை (The Department of Government Efficiency (DOGE)), இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த 21 மில்லி... மேலும் பார்க்க