செய்திகள் :

"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" - மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!

post image

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.

போன் பார்க்காமல் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தால் வீட்டில் உள்ள டிவி சத்தம் அவர்களது படிப்புக்குத் தடையாக இருக்கும். இதனால் நாடு முழுவதும் சில கிராமங்களில் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மாலை நேரத்தில் இரண்டு மணி நேரம் டிவி மற்றும் மொபைல் போன்களை ஆப் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி மாவட்டத்தில் இருக்கும் பிம்பல்குதா என்ற கிராமத்தில் மாணவர்களின் படிப்புக்காக தினமும் மாலை இரண்டு மணி நேரம் மொபைல் போன் மற்றும் டிவியை ஆப் செய்துவிடுகின்றனர்.

மக்கள் தினமும் இதைச் செய்ய மறந்துவிடக்கூடாது என்பதற்காக கிராமத்தின் மத்திய பகுதியில் மிகப்பெரிய மணி ஒன்றைத் தொங்கவிட்டு இருக்கின்றனர்.

மணி
மணி

மாலை 7 மணியாகிவிட்டால் உடனே அங்குள்ள மணியடிக்கும். மணியடித்தவுடன் அனைவரும் டிவி மற்றும் மொபைல் போன்களை ஆப் செய்துவிட வேண்டும். இத்திட்டத்தை கிராம பஞ்சாயத்துத் தலைவர் கஜானன் மற்றும் துணை பஞ்சாயத்துத் தலைவர், உள்ளூர் ஆசிரியர்கள் இணைந்து ஆலோசித்து செயல்படுத்தி இருக்கின்றனர்.

அதோடு மணியடித்ததோடு நின்றுவிடாமல் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் படிக்கிறார்களா என்றும், யார் வீட்டிலாவது டிவி பார்க்கிறார்களா என்பதையும் தனிக்குழு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு ஆய்வு செய்ய தனிக் குழுவை பஞ்சாயத்து சார்பாக அமைத்து இருக்கின்றனர்.

இது குறித்து கிராம பஞ்சாயத்துத் தலைவர் கஜானன் கூறுகையில், "எதிர்கால சந்ததிக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் தினமும் டிவி, மொபைல் போனை ஆப் செய்கிறோம்'' என்றார்.

7 மணிக்கு மொபைல், டிவியை ஆப் செய்துவிட்டு இரவு 9 மணிக்கு ஆன் செய்கின்றனர். கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹலகா என்ற கிராமத்திலும் இதேபோன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை மொபைல் போன், டிவியை ஆப் செய்து மாணவர்களின் படிப்புக்கு உதவுகின்றனர்.

இந்தக் கிராமத்தில் மாலை 7 மணியாகிவிட்டால் அலாரம் அடித்து அனைவரையும் மொபைல் போன், டிவியை ஆப் செய்ய நினைவுபடுத்துகின்றனர்.

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், “ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்ட... மேலும் பார்க்க

சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றிக் கொன்ற சிறுவன்; தாயின் தீராத வேதனை!

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ராஎன்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரி... மேலும் பார்க்க

தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவக... மேலும் பார்க்க

திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!

மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும்... மேலும் பார்க்க

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்!

தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை கொண்டாடும் வகையில்,கவின்கேர்நிறுவனம்எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன்இணைந்து24வதுகவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் பல்வேறு ... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருகை; இன்று மோடியுடன் சந்திப்பு! - முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, ... மேலும் பார்க்க