செய்திகள் :

திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!

post image

மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும் இல்லாமல் இருந்தார்.

திடீரென இரு சக்கர வாகனத்தை ஓட்டிய வாலிபர், இரு சக்கர வாகனத்தின் வேகத்தைக் கூட்டி, முன் சக்கரத்தை மேல் நோக்கித் தூக்கினார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத பின்னால் இருந்த பெண்ணின் கைபிடி நழுவியது. பின்னால் உள்ள இருக்கையின் நீளம் குறைவாக இருந்தது. பின்னால் பெரும்பகுதி டயர்தான் தெரிந்தது. வாலிபர் திடீரென வேகத்தைக் கூட்டி முன் பக்கச் சக்கரத்தைத் தூக்கியதால், பின்னால் இருந்த பெண் அதிர்ச்சியில் கையை நழுவ விட்டார். ஆனாலும் அந்த வாலிபரின் இடுப்பைப் பிடித்துக்கொண்டார். அப்பெண் இருக்கையில் இருந்து பின்நோக்கிச் சென்று டயரில் போய் அமர்ந்தார். அவரை டயர் உள்நோக்கி இழுத்தது.

இதனால் வண்டியின் வேகம் குறைந்தது. ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்த வாலிபர், வாகனத்தை நிறுத்தி பின் பக்க டயரில் சிக்கிக்கொண்ட பெண்ணை மீட்டார். இந்தச் சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. அதனைப் பார்த்த பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அப்பெண்ணின் கால் மற்றும் கை அந்த வாலிபரைச் சற்று பிடித்திருந்தது. பின்னோக்கிச் சென்ற பெண் கீழே விழுந்திருதால் பின்னால் இருந்து வரும் மற்ற வாகனம் அப்பெண்ணின் மீது ஏறி இருக்கும். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. ஆனால் இச்சம்பவத்தால் அப்பெண்ணின் இடிப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை அந்த வாலிபர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய அந்த வாலிபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் போலீஸுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவக... மேலும் பார்க்க

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்!

தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை கொண்டாடும் வகையில்,கவின்கேர்நிறுவனம்எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன்இணைந்து24வதுகவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் பல்வேறு ... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருகை; இன்று மோடியுடன் சந்திப்பு! - முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, ... மேலும் பார்க்க

ரூ.60 கோடி சொத்து; வாரிசு இல்லாமல் விட்டுச்சென்ற பெண் டாக்டர் - உரிமை கோரி முட்டி மோதும் உறவுகள்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் டாக்டர் ஹேமலதா(81). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த டாக்டர் ஹேமலதா இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் வி... மேலும் பார்க்க

மும்பை ரயில் தண்டவாளத்தில் பட்டப்பகலில் போர்வை மூடி உறங்கிய போதை ஆசாமி! - ரயில் சேவை பாதிப்பு

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ரயில் மட்டுமல்லாது மும்பை ரயில் நிலையங்களிலும் காலை, மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தி... மேலும் பார்க்க

வாழ்நாள் துயரத்தில் முடிந்த Maternity Photoshoot; கவனச்சிதறலால் பறிபோன 3 வயது மகனின் உயிர்

பெங்களூருவின் ஜே.பி நகரைச் சேர்ந்தவர்கள், சுவாதி-சரண் ராஜ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் லக்ஷ்மீர் என்ற மகன் இருந்தார். சுவாதி தனது இரண்டாவது பிரசவத்திற்காகக் காத்திருந்த நிலையில், கடந்த சனிக... மேலும் பார்க்க