செய்திகள் :

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

post image

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அவருக்கும் அன்சுல் என்பவருக்கு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இருவரும் காதலர் தினத்தன்று இரவு விருந்தை வீட்டில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில்தான் மஹக் படுகொலை செய்யப்பட்டார். அன்சுல் இரவு 11 மணிக்கு போலீஸாருக்கு போன் செய்து, மர்ம நபர்கள் திருடுவதற்காக வந்ததாகவும், அவர்கள் மஹக்கை கழுத்தை அறுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அன்சுல் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் கொடுத்தார். அவர் சொல்வது நம்பும்படியாக இல்லை. அவரால் கொலையாளி குறித்து சரியாக தகவல் கொடுக்க முடியவில்லை.

இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்தான் இக்கொலையை செய்திருந்தார் என்பது தெரியவந்தது. பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்த மஹக் மீது திருமணமான நாளில் இருந்து அன்சுல் சந்தேகப்பட்டு வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பத்தன்று காதலர் தின விருந்தில் இருவரும் இருந்தபோது இதே பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபத்தில் அன்சுல் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொலைசெய்துள்ளார். அதன் பிறகு இதனை கொள்ளை முயற்சி போன்று சித்திரிப்பதற்காக கழுத்தையும் அறுத்துள்ளார். அவரைக் கைதுசெய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். மஹக் தந்தை கிருஷ்ணா ஆரம்பத்தில் இருந்தே அன்சுல்தான் இக்கொலையை செய்திருக்கவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார். அது உண்மையாகி இருக்கிறது. இருவருக்கும் கடந்த செப்டம்பரில்தான் திருமணம் நடந்தது.

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க

ஆவியிடம் மன்னிப்பு; காதலியை கொலை செய்து பிணத்துடன் உறவு - மும்பையில் பதுங்கி இருந்த காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ. படித்து வந்த 24 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலன் பியூஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபி... மேலும் பார்க்க

கமுதி: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களது மகன் சோலைசெல்வம்(30), இவரது மனைவி கோகிலா(32) மற்றும் இவர்களது இரு குழந்தைகள் உள்ளிட்ட ஆ... மேலும் பார்க்க

கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை நடத்தும் போலீஸ்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாங்கோட்டில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மிலிட்டரி கேம்ப் உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த முகாமுக்குள், அனுமதி இல்லாமல் யாரும் நுழையமுடியாது. இங்கு ... மேலும் பார்க்க

ஒரே வீட்டில் மனைவி, காதலி: பணம் கேட்ட இன்ஸ்டா காதலியை கொன்று செப்டிங் டேங்கில் போட்ட காதலன்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிஷத்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் சமீர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா என்ற இடத்தை சேர்ந்த ஷியா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூ... மேலும் பார்க்க