`ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; ஆனால் பழனிசாமி பாராட்டுகிறா...
Vikatan Signature Campaign: பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் IAS மச்சேந்திரநாதனே அறிக்கை வெளியிடுக!
ஆயிரம் நாள்களைக் கடந்து பரந்தூர் விமான நிலையப் பிரச்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அதிமுக, தவெக, இடதுசாரிகள் தொடங்கி பூவுலகு அமைப்பு என பல்வேறு தரப்பினர் அவர்களை சந்திக்கச் செல்கின்றனர்.
ஆனால், அவர்களுக்கு இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை.

பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான உயர் மட்டக் குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் வெளியிட முடியாது என தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயர் மட்டக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என விகடன் கோருகிறது. இதற்கான ‘Signature Campaign' தான் இது.
பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என நீங்களும் நினைத்தால், இந்த Form-ஐ Fill செய்யுங்கள்!














