செய்திகள் :

அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ - வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?

post image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயம் போன்றே ஆலங்காயம் மதனாஞ்சேரியில் தனது சொந்த செலவில் `தளபதி அறிவாலயம்’ கட்டி, கட்சிக்காக ஞானவேலன் அர்ப்பணித்த தகவலும், முதல்வர் ஸ்டாலினிடம் கவனம் பெற்றிருக்கிறது.

கடந்த 2016 ஜனவரி 26-ம் தேதி தளபதி அறிவாலயத்தை கட்டி முடித்து, அப்போதைய பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகனையும் நேரில் அழைத்து திறக்கச் செய்திருக்கிறார் ஞானவேலன். அப்போது, அன்பழகன் பிரியப்பட்டு `ஆனியன் ஊத்தாப்பம்’ கேட்டு, அதை வாங்கிக்கொடுத்ததையும் மலரும் நினைவுகளாகப் பகிர்கிறார் ஞானவேலன்.

தளபதி அறிவாலயம்

இந்த நிலையில்தான் `உடன்பிறப்பே வா..’ நிகழ்ச்சி மூலம் ஸ்டாலினுடன் ஒன் டூ ஒன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, தளபதி அறிவாலயத்தின் புகைப்படத்தைக் காட்டி பத்து ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்காக செய்துவரும் பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஞானவேலன். தற்போது, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய இருத் தொகுதிகளுக்குமே விருப்ப மனு வழங்கிவிட்டு, தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறார்.

ஞானவேலனுக்காக அவரின் மனைவியும், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவருமான பிரியதர்ஷினி ஞானவேலனும் அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் விண்ணப்பம் வழங்கியிருக்கிறார். வாணியம்பாடி தொகுதி தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க வசம் இருக்கிறது. `கூட்டணிக்குத் தாரைவார்ப்பதால் தி.மு.க தொடர் தோல்வியைச் சந்திக்கிறது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நேரடியாகப் போட்டியிட்டு தொகுதியைக் கைப்பற்ற வேண்டும்’ எனக் குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள்.

மாவட்டம் Vs வாரிசு; அண்ணா நகருக்குக் குறிவைக்கும் இருவர்! யாரை டிக் அடிக்கப் போகிறார் மாப்பிள்ளை?

உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின் 'அண்ணா நகர்' தொகுதியைப் பிடிக்க சபரீசனின் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசுவும் சிட்டிங் எம... மேலும் பார்க்க

ஈரோடு: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைத்திருந்த பேனர்கள் - இரவோடு இரவாக கிழித்துச் சென்ற மர்ம நபர்கள்

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" - கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி ... மேலும் பார்க்க

`முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..!' - இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள்! | அரசியல் ஆடுபுலி 8

`எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர்'அரசியல் ஆடுபுலி 8தமிழ்நாட்டு அரசியலில், எம்.எல்.ஏ. ஆகாதவர்கள், முதலமைச்சர் ஆன ஆடுபுலி ஆட்டங்கள் அவ்வப்போது நடந்துள்ளன. ராஜாஜி, காமராஜர், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் எம்.... மேலும் பார்க்க

Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்று... மேலும் பார்க்க

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரி... மேலும் பார்க்க