செய்திகள் :

`அமித் ஷாவா, அவதூறுஷாவா? மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால் இது..!' - மு.க.ஸ்டாலின்

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், விலையில்லா வீட்டு மனை பட்டா உட்பட ரூ.1549.90 கோடியிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் பேசும்போது தமிழ்நாடு அரசு இந்து சமய வழிபாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் செயல்படுகிறது என்கிறார்.

அவர் 'அமித் ஷாவா அல்லது அவதூறுஷாவா' என்று சந்தேகம் வருகிறது. அந்தளவிற்கு உண்மைக்குப் புறம்பான விஷயங்களைப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் அமித் ஷா. இதற்காக அவருக்குக் கடுமையான கண்டனங்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை தமிழ்நாட்டில் 4,000 கோயில்களில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறோம். இப்படி ஒரு சாதனையை பாஜக ஆள்கிற மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

997 கோயில்களுக்குச் சொந்தமான 7,071 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் அரசைப் பாராட்டுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் வாரம் இரு முறை இந்து சமய பணிகளை தொடங்கி வைக்கிறேன். அனைத்து சமயத்தவர்கள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கிறோம். இப்படி இருக்கும்போது துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல.

அதோடு தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா? என அமித் ஷா கேட்கிறார். அதையே தான் நாங்களும் சொல்கிறோம். தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லியிலிருந்து வேறு யாரோ ஒருவர் ஆள வேண்டுமா? என முடிவு செய்யும் தேர்தல் இது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க-வை ஆட்சியில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். தமிழ்நாட்டில் கடந்த மூன்று தேர்தல்களிலும் படு தோல்வியடைந்தும் உங்களுக்குப் புரியவில்லையா... தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றிக் கொள்ளாத போது மக்களும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். திரும்பவும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்" என்றார்.

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிர... மேலும் பார்க்க

பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' - ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக திட்டமிட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு அடைக்கல இடம் கிடைக்கும் என்றச் சூழலில் தனித்து விடப்பட்ட... மேலும் பார்க்க

இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained

ட்ரம்ப் அரசு ரெஸ்ட்டே எடுக்காது போலும். அது தனது அதிரடிக்கு தயாராகிவிட்டது. நேற்று வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சந்தித்துள்ளார். இது அமெரிக... மேலும் பார்க்க

"ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்" - திருமாவளவன்

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்த... மேலும் பார்க்க

மும்பை: விலகும் விசுவாசிகள்: நெருக்கடியில் உத்தவ் வாரிசு; கோட்டையை தக்கவைப்பாரா ஆதித்ய தாக்கரே?!

மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தல் தாக்கரே சகோதரர்களுக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் ராஜ் த... மேலும் பார்க்க

பாமக: `ஏன் அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை செல்லாது?' - ராமதாஸ் வழக்கறிஞர் விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் அறிவித்த கூட்டணி செல்லுமா என்பது குறித்து ராமதாஸின் வழக்கறிஞர் அருள் பேசியதாவது..."மருத்துவர் ஐயா (ராமதாஸ்) பா.ம.க-வின் தலைவராக இ... மேலும் பார்க்க