செய்திகள் :

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

post image

சேப்பாகத்தில்  இன்று நடைபெறும் சென்னை  சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது. 

இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் கிட்டதட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. குறிப்பாக, சென்னை சூப்பர்கிங்கஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில், மீதம் உள்ள இரண்டு போட்டிகளிவுலும் வெற்றி கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளது. சென்னை அணியில் முகமாக அறியப்படும் தோனி, இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடர் போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இன்று நடைபெறும் ஹைதராபாத் சன்ரைசஸ் அணியுடனான போட்டியில் அவர் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. நடப்பு தொடரில் சென்னை மைதானத்தில் நடைபெற உள்ள கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது

தோனி - விஜய்

சேப்பாக்கத்தில் குவியும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு தோனியின் வருகை பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகிவந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் அவர் பங்கேற்று விளையாடிய பிறகு, தனது ஓய்வு முடிவையும் அறிக்கப்பட உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது. 

இந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டமே தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்கிற தகவல் முதல்வர் அலுவலகம் வரை எட்டியது. இதனால் இன்று நடைபெறும் போட்டியை நேரடியாக கண்டுகளிக்க முதல்வர் விஜய் விரும்பியிருக்கிறார். அவருடன் அவர் அமைச்சரவை சகாக்களும் இந்த போட்டியை காண விரும்புகிறார்கள்.

இதனால், வி.ஐ.பி கேலரியில் உள்ள மொத்த டிக்கெட்களையும் முதல்வர் அலுவலகம் தரப்பே வாங்கியுள்ளதாம். ஏற்கனவே மைதானத்தில் தோனி இறங்கினால், விண்ணை முட்டும் அளவுக்கு சத்தம் எழும். இப்போது முதல்வர் விஜய்யும் இந்த போட்டியை கண்டுகளிக்க வந்தால், சேப்பாக்கம் மைதானமே ஆரவாரத்தினால் அதிரும் என்கிறார்கள். 

முதல்வர் இந்த போட்டியை காணும் சூழ்நிலை இருப்பதால், பாதுகாப்பு வசதிகளையும் பலப்படுத்த சொல்லியுள்ளது காவல்துறை.

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார். மோடி நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறி... மேலும் பார்க்க

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' - நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. தற்போது சந்தையில் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ தாண்டி வர்த்தகம் ஆகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், வ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் - நிம்மதியடைந்த பொதுமக்கள்!

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.அவற்றுள் மிகவும் கவனம் ப... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ - திமுக - காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

``தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்...!’புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும்... மேலும் பார்க்க

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

`முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முடிவு செய்தார்களா?' - திமுக, அதிமுக கூட்டணி குறித்து திருமா

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க