செய்திகள் :

`முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முடிவு செய்தார்களா?' - திமுக, அதிமுக கூட்டணி குறித்து திருமா

post image

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் திமுக அதிமுக கூட்டணி பேசப்பட்டதா? முதல்வர் வேட்பாளராக திருமாவை நிறுத்த முடிவு செய்தார்களா? என்பது குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த திருமாவளவன், " என்னை முதல்வராக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை.

திருமாவளவன் - ஸ்டாலின்
திருமாவளவன் - ஸ்டாலின்

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தபின், செய்தியாளர் சந்திப்புக்கு புறப்பட்டபோது கூட, ஒரு தரப்பை சேர்ந்த நபர் தம்மை தொடர்பு கொண்டு, ஆதரவு கடிதம் கொடுத்திருந்தாலும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்றும், தம்மை முதல்வராக அறிவிக்கப்போவதாகவும் கூறினார்.

ஆனால், அவரிடம் வேண்டாம் என நான் கூறி விட்டேன்” என்று தெரிவித்திருந்தார். தற்போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவிடம் இதுதொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " திமுக - அதிமுக கூட்டணி பேசுவதாக கிசுகிசுக்களாக வெளியான தகவல்கள் அடிப்படையிலேயே கருத்து கூறினேன். இரு தரப்பிலும் என்னிடம் யாரும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெக ஆட்சிக்கு ஆதரவு தந்தோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

2 இடங்களை வைத்துக்கொண்டு நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை. வருங்காலத்தில் அதிமுக, தவெகவுக்கு ஆதரவு அளித்தால், எங்களுடைய ஆதரவைத் தொடர்வது குறித்து நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்க... மேலும் பார்க்க

`பூத் ஏஜென்ட், ஏன் கவுண்டிங் ஏஜென்ட் கூட இல்லாமல் வெற்றி; இது நம் கண்ணுக்குத் தெரியவில்லை'- ஸ்டாலின்

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க

மே 17 நினைவேந்தல்: `இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அழுத்தம் தர வேண்டும்' - திருமுருகன் காந்தி

2009, மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், பல்வேறு தமிழ்த்தேசிய - திராவிட இயக்கங்களும் இனப்படுகொலை நாளுக்கு நினைவேந்தல்... மேலும் பார்க்க

திமுக: "60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இருக்க கூடாது.!"- வைரலாகும் எழிலன் பதிவு

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. திமுகவின் கோட்டை என கருதப்படும் சென்னைம மாவட்டத்தில் உள்ள 16 தொக... மேலும் பார்க்க

'அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கை!

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் சிறிது காலம் ஓய்வெடுக்கபோவதாக எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க