செய்திகள் :

ராணிப்பேட்டை: ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த தாய் - உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்த நெகிழ்ச்சி

post image

ராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரின் மனைவி கோமளேஸ்வரி (வயது 57). இவர்களின் மகன் தினேஷ் குமார் (வயது 28). டிப்ளமோ படித்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி இரவு, பைக்கில் சென்றபோது கண்ணமங்கலம் கூட்ரோடு அருகில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் தினேஷ் குமார். உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் குமார், விரைவான மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டை ரத்தினகிரியில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பலனின்றி, நேற்று காலை மூளைச்சாவு ஏற்பட்டது.

இளைஞர் தினேஷ் குமார்

இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்படி, இதயம் - சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், கல்லீரல் - சி.எம்.சி ராணிப்பேட்டை வளாக மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் - வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் - சி.எம்.சி ராணிப்பேட்டைக்கும், கண்கள் - வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, 5 பயனாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, உரிய மரியாதையுடன் இளைஞர் தினேஷ் குமாரின் உடல் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவரைத் தொடர்ந்து தனது ஒரே மகனும் இறந்துவிட மிகுந்த மனவேதனைக்குள்ளாகியிருக்கிறார் தாய் கோமளேஸ்வரி.

புதுக்கோட்டை ஆசிரியர் பொன்.சக்திவேல்; பார்வையற்றோரின் இருள் விலக்கும் `டிஜிட்டல் ஏகலைவன்!'

சக்திவேலின் டிஜிட்டல் புரட்சி"கண் பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு புத்தகத்தை வாசித்துக் காட்ட ஆள் கிடைப்பது வரம். ஆனால், பிறர் உதவியை எதிர்பார்க்காமல் அவர்களே அந்தப் புத்தகங்களை வாசிக்கும் சூழலை உருவாக்கி... மேலும் பார்க்க

அமெரிக்கா: 176 பட்டதாரிகளின் கல்விக் கடன்களைத் திருப்பி செலுத்திய இந்திய வம்சாவளி அனில் கோச்சர்!

அமெரிக்காவில் நடைபெற்ற வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகத்தின் வில்சன் காலேஜ் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் பட்டமளிப்பு விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் கோச்சர் மற்றும் அவரது மனைவி மரிலின் மாணவர்களுக்கு... மேலும் பார்க்க

`இதோ என் சகோதரி' - கல்லறையைத் தோண்டிய தம்பி; ஒடிசாவில் 19,300 ரூபாய்க்காக எலும்புக்கூடாக வந்த சகோதரி

ஒடிசா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம், மனிதனின் வறுமையும் மாற்றவே முடியாத சில விதிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு அதிர்ச்சிகரமான சாட்சியாக அமைந்தது. க... மேலும் பார்க்க

65 வயதில் BMWR1200GSA; உலகம் சுற்றும் வாலிபனாக பல நாடுகளைச் சுற்றிச் வரும் கதிரவன்

மலேசியத் தமிழரான கதிரவன் தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கும் விதமாக 65 வயதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்... மேலும் பார்க்க