செய்திகள் :

திமுக: "60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இருக்க கூடாது.!"- வைரலாகும் எழிலன் பதிவு

post image

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

திமுகவின் கோட்டை என கருதப்படும் சென்னைம மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 இடங்களில் திமுக தோல்வியடைந்திருக்கிறது.

குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின்

இதனைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

திமுக தோல்வியுற்ற இடங்கள் அதற்கான காரணங்கள் என்ன? கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை, எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுவது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் திமுக-வின் மருத்துவ அணிச் செயலாளரும், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கோர்ஸ் கரெக்ஷன் ஸ்டெப் 1 (Course Correction Step1)” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வயசு என்ன?... ஆடி வந்தா 67 வரும்... ஆடி வரதுக்கு முன்னாடியே உன் பாடி வந்துரும் போல.

 எழிலன் - திமுக
எழிலன் - திமுக

இன்னும் நீ இந்த சீட்ல உட்காந்து தேச்சுனு இருக்கிற. இனி இந்த இந்த கைரா நாட்டிற்குள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இருக்க கூடாது...அண்ணா திடீர்ன்னு சொன்னா நாங்க எங்க போவது?” என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகும் நிலையில் திமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தான் எழிலன் வலியுறுத்துகிறார் என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

`முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முடிவு செய்தார்களா?' - திமுக, அதிமுக கூட்டணி குறித்து திருமா

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

`பூத் ஏஜென்ட், ஏன் கவுண்டிங் ஏஜென்ட் கூட இல்லாமல் வெற்றி; இது நம் கண்ணுக்குத் தெரியவில்லை'- ஸ்டாலின்

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க

மே 17 நினைவேந்தல்: `இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அழுத்தம் தர வேண்டும்' - திருமுருகன் காந்தி

2009, மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், பல்வேறு தமிழ்த்தேசிய - திராவிட இயக்கங்களும் இனப்படுகொலை நாளுக்கு நினைவேந்தல்... மேலும் பார்க்க

'அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கை!

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் சிறிது காலம் ஓய்வெடுக்கபோவதாக எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க

`கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளைப் பார்த்து குழந்தை நிச்சயம் மயங்கும்; ஆனா.!” - உதயநிதி

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

'இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது' - ஸ்டாலின் கூறியது என்ன?

தஞ்சாவூரில் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார். திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், " யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ... மேலும் பார்க்க