செய்திகள் :

ஆளுநர் வெளிநடப்பு: "நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா?" - அப்பாவு கேள்வி

post image

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அதன் பின், 'ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது... தேசிய கீதத்திற்கு மரியாதை தரவில்லை' என்று தமிழ்நாடு அரசின் மீது நீண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இன்றைய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு.

அப்போது அவர் கூறியதாவது...

"ஜனநாயக முறைப்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைத்தோம். இன்று அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆளுநர் உரையை வாசியுங்கள் என்று கூறியது தவறில்லையே. சபையின் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நாங்கள் நடந்தோம்.

சபையின் மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தயார் செய்து தரும் உரையைத்தான் ஜனாதிபதி படிக்கிறார். அப்படித்தான் இங்கேயும் தமிழ்நாடு அரசு தயார் செய்து தரும் உரையைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறோம்.

ஆக, நாடாளுமன்றத்தில் என்ன தவறு நடக்கிறதோ, இங்கேயும் அதே தவறுதான் நடக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் இப்படி வெளியேற முடியுமா?

ஒருவர் பேசும்போது, இன்னொருவர் குறுக்கிடக்கூடாது என்று மைக் ஆஃப் செய்யப்படும். அப்படி நான் பேசும்போது, ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்.

'Humble request' என்றுதான் அவரிடம் உரையை வாசிக்கச் சொல்லிக் கேட்டேன். ஆனாலும், அவர் வாசிக்கவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எப்போதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்... இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த மரபு எப்போதுமே மாறாது" என்று பேசியுள்ளார்.

தேனி: "யார் தற்குறி?" - பேனர் சண்டையில் திமுக - தவெக; மோதல் பதற்றம்; பேனர் அகற்றம்; என்ன நடந்தது?

தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் ஐந்தாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது வார்டில் உள்ள வினோபாஜி காலனியில் சாலை அமைப்பதற்காக பேரூராட்சியிலிருந்து நிதி பெற்று சால... மேலும் பார்க்க

சட்டசபை: "ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க சட்டத் திருத்தம்” - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கு திமுகவினர் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்தி... மேலும் பார்க்க

"எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்!" - அமைச்சர் ரகுபதி விளக்கம்

'தேசிய கீதம் பாடப்படவில்லை... மைக் ஆஃப் செய்யப்பட்டது... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று ஏகப்பட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ... மேலும் பார்க்க

"தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை" - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்

எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.19) நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, "அதிமுகவை அடிமைக் கட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்... மேலும் பார்க்க

'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2

கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது'... மேலும் பார்க்க

`காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டின்... மேலும் பார்க்க