செய்திகள் :

'இந்தியா' தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்

post image

வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்து டி-20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இதில் இந்தியாவில் நடக்கும் வங்கதேச போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றக் கூறி வங்கதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

இதற்கு வங்கதேச வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஃபேன்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பது காரணமாக கூறப்பட்டது.

இந்தியாவில் அப்படி ஒன்றும் ஆபத்தில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இதனால், வங்கதேச அணி வருகிற டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம்.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறுவதாவது…

“நாங்கள் டி-20 உலகக் கோப்பையில் கலந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தியாவில் நடக்க உள்ள போட்டிகளை இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாற்றித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் எங்களுக்கு அச்சுறுத்தல் என்பது உண்மை தான். இதை நாங்கள் யூகத்தின் அடிப்படையில் கூறவில்லை.

எங்களுக்கு உலகக் கோப்பை விளையாட வேண்டும்… ஆனால், இந்தியாவில் விளையாடத் தயாராக இல்லை.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தொடர்ந்து பேசுவோம்.

முஸ்தஃபிசுர் ரஹ்மான்
முஸ்தஃபிசுர் ரஹ்மான்

முஸ்தஃபிசுர் விஷயம் தனிப்பட்ட விஷயம் அல்ல. இந்தியா தான் அதில் முக்கியமாக முடிவு எடுத்தது.

இந்தியாவில் இருந்து போட்டியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துவிட்டது.

உலக கிரிக்கெட்டின் புகழ் இப்போது எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. அதன் புகழ் மங்கிக் கொண்டே போகிறது.

அடுத்து கிரிக்கெட் ஒலிம்பிக்ஸிற்கு செல்லப்போகிறது. எங்களைப் போன்ற ஒரு நாடு அதில் கலந்துகொள்ளவில்லை என்றால், அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு தான் தோல்வி”. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Olympics 2028: "ஒலிம்பிக்கில் விளையாடுவதுதான் என்னுடைய ஆசை; ஆனால்" - மனம் திறக்கும் ஸ்டீவ் ஸ்மித்

34-வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன.இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ... மேலும் பார்க்க

'தேசியளவில் சாதித்தவருக்கே இந்நிலை என்றால்' - ரயிலில் தடகள வீரர்களுக்கு நேர்ந்த அவலம்; பின்னணி என்ன?

கம்பம் தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவின் டாப் வீரர்கள் தேவ் மீனாவும், குல்தீப் யாதவும்.அனைத்து இந்தியா பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட இருவரும், தங்களது பல்கலைக்கழகத்திற்கு ரயிலில் த... மேலும் பார்க்க

``பேட்மிண்டன் நடத்துவதற்கு டெல்லி தகுந்த இடமல்ல" - போட்டியிலிருந்து விலகிய ஆண்டன்சென்!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் ... மேலும் பார்க்க

IND vs NZ: ``அதிக ஆர்ப்பரிப்பு பிடிக்கல; எனக்கும், தோனிக்கும் அப்படி தான் நடக்குது, ஆனா.!" - கோலி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.12) வதோ... மேலும் பார்க்க

BCB:``பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வராது!" - ஐசிசி யிடம் கோரிக்கை வைத்த பிசிபி!

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையி... மேலும் பார்க்க

"இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும்" - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்

இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும் என்று கால்பந்து வீரர்கள் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். கடந்தாண்டு செப்டம்பரிலேயே தொடங்க வேண்டிய ISL கால்பந்து தொடர், போதிய நிதி இல்லாததால் இன... மேலும் பார்க்க