செய்திகள் :

இரண்டு மசோதாக்கள் அமல்படுத்த பாஜகவின் பிளான்; ராகுலை சந்தித்த கிரண் ரிஜிஜு - ராகுல் சொன்ன 'நோ'!

post image

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்டு விடுகிறது.

இன்றும் இதே காட்சி தான். இன்றும் சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒத்திவைப்பிற்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 5) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது அறையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஏன் சந்திப்பு?

தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா - இந்த இரண்டு மசோதாக்களையும் கொண்டு வருவதில் பாஜக அரசு முனைப்புடன் இருக்கிறது.

இதற்காகவே கிரண் ரிஜிஜு ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கிறார். இந்த இரண்டு மசோதாவிற்கும் காங்கிரஸின் ஒத்துழைப்பைக் கேட்டிருக்கிறது பாஜக.

ஆனால், இந்த இரண்டிற்குமே உடனடியாகவே பெரிய 'நோ' சொல்லிவிட்டாராம் ராகுல் காந்தி.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்தும், காங்கிரஸின் ஒத்துழைப்பை வைத்தும் இந்தக் கூட்டத்தொடரில் இந்த இரு மசோதாக்களையும் அமல்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது பாஜக.

ஆனால், அது இப்போது நடக்காது போலும்.

அமளி..!

கூடவே, ராமர் கோயில் நிதி கையாடல் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்... ஜூலை 20-ம் தேதி டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறைத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இது இரண்டும் நடக்கவில்லை என்றால், அவையில் தொடர்ந்து அமளி ஏற்படும் என்றும் கிரண் ரிஜிஜுவிடம் தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.

ஆக மொத்தம், இந்தக் கூட்டத்தொடரிலும் பாஜகவின் பிளான் வொர்க் அவுட் ஆகாதோ?

"வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது..!"- பட்ஜெட் குறித்து சீமான்

"மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள... மேலும் பார்க்க

TN Budget: "5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்"- தங்கம் தென்னரசு

தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர்,... மேலும் பார்க்க

TN Budget: `வருந்தத்தக்கது; மக்களின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை' - சிபிஐ வீரபாண்டியன்

‘தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும். எனினும் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு... மேலும் பார்க்க

TN Budget 2026: `பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா?' - இல்லை என விளக்கும் ராஜ்மோகன்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. பலரும் ... மேலும் பார்க்க

ஆட்சி மாறியும் அரசின் கடன் தொடர்கிறது? - தவெக அரசின் ரூ.1.73 லட்சம் கோடி கடன் திட்டம்!

2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசு புதிய கடனாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி பெறத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரூ.51 ஆயிரத்து 971 கோடி மதிப்பிலான பழ... மேலும் பார்க்க

TN Budget: 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு! - ஸ்டாலின்

பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. வெற்றிக் கழகம் சமர்ப்பித்த வெற்று பட்ஜெட். முதலமைச்சர் தலைமை சாதாரண மக்களின் எ... மேலும் பார்க்க