செய்திகள் :

உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா‌ கமேனி? வெளியான வீடியோ; முடிவுக்கு வந்த கேள்வி|Video

post image

ஈரான் போரின் முதல் நாளே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதன் பிறகு, ஈரானின் தலைமை ஆட்டம் காணும் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கணக்குப்போட்டன.

ஆனால், ஈரானின் தலைமை அயோதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியை அடுத்த உச்சத் தலைவராகக் கொண்டு வந்தது.

இந்த அறிவிப்பிற்குப் பிறகு, மொஜ்தபா காமேனி எங்கேயும் வெளியில் வரவில்லை.

மொஜ்தபா காமேனி
மொஜ்தபா காமேனி

அறிக்கைகள் மட்டுமே

அவரது தந்தை இறந்த அதே தாக்குதலில், இவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. அதற்கு மொஜ்தபா சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

மேலும், மொஜ்தபாவின்‌ உயிருக்கு அமெரிக்கா, இஸ்ரேலால் ஆபத்து என்றும் கூறப்பட்டது.

இதனால், தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட மொஜ்தபா கலந்துகொள்ளவில்லை.

அவரிடம் இருந்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தன.

மசூத் பெசெஷ்கியன் சந்தித்த...

சமீபத்தில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியன் மொஜ்தபாவைச் சந்திக்கக் கடத்தி செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பார்த்த நபர் மொஜ்தபா இல்லை என்று சந்தேகப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கு முன்பும் சரி... பின்னும் சரி... உண்மையிலேயே மொஜ்தபா உயிரோடு இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது... இருக்கிறது.

இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெஹர் மொஜ்தபா கமேனியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனால், அந்த வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்கிற எந்தக் குறிப்பும் இல்லை.

காவல்துறை கௌரவங்களில் ஒன்றான 'வண்ணக்கொடி' அங்கீகாரம்; புதுச்சேரி காவல்துறைக்கு அளிப்பு| Photo Album

வண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச... மேலும் பார்க்க

"ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" - ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ஈரான் போரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம், ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு ஏன் ஆபத்து? - மாணிக்கம் தாகூரின் 5 விளக்கங்கள்|MODI-LIMITATION

தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.இந்த வேளையில் தொகுதி மறுவரையறையை 'மோடி-லிமிட்டேஷன்' என்றும், அது ஏன் கூடாது என்றும் தனது எக்ஸ் பக்... மேலும் பார்க்க

பழனி நில மோசடி வழக்கு: "அன்வர்தீன் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்?" - தவாக வேல்முருகன் கேள்வி

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைப்பது யார்?இந்நிலையில் ... மேலும் பார்க்க

"திமுக அரசுக்குப் போட்டியாக தவெக அரசும் துரோகம் செய்திருக்கிறது" - மின் இணைப்பு குறித்து அன்புமணி

தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? என்று கேள்வி கேட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

"தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக ஏமாற்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சொல்லும் விளக்கம் என்ன?

தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக தவறாக வழிநடத்துவதாக மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பதிவிட்டிருப்பதாவது..."அனைத்து ... மேலும் பார்க்க