செய்திகள் :

``எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன?

post image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இபிஎஸ், ஓபிஎஸ்
இபிஎஸ், ஓபிஎஸ்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வா.புகழேந்தி "அதிமுக தொண்டர்கள் எந்த காலத்திலும் பாஜக-வுடன் கூட்டணியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம், எதிர்த்து நிற்போம். 'புது கட்சி தொடங்க மாட்டேன், நான் அப்படி சொல்லவில்லை' என்று கூறியுள்ளது வியப்பாக இருக்கிறது.

இவரை அருகில் வைத்துக் கொண்டு சொன்னவர் வைத்திலிங்கம், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வைத்திலிங்கம் சொன்னதை அப்படியே மறைக்கிறார் ஓபிஎஸ், அதேபோல மூத்த தலைவர் பண்ருட்டியார், 'தேசிய ஜனநாயக கூட்டணியோடு இனி கூட்டணி இல்லை' என்று கூறினார்.

'ஒரு மாதம் பொறுமையாக இருப்போம். பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால் தனி கட்சி ஆரம்பிப்போம் என்று வைத்திலிங்கம் மிகத் தெளிவாக சொன்னாரா இல்லையா, தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறும் என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், இப்போது அமித் ஷாவை நேரில் சந்தித்து வந்ததாக ஓபிஎஸ் சொல்கிறார். எல்லாமே முன்னுக்கு பின் முரணாக நடக்கிறது, சொந்தக் கட்சி விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று கூறிய உள்துறை அமைச்சர், கே ஏ செங்கோட்டையனை அழைத்து பேசுகிறார். ஓபிஎஸ்சை அழைத்து பேசுகிறார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் புகழேந்தி
ஜெயலலிதா நினைவிடத்தில் புகழேந்தி

எப்படியும் பழனிசாமி, முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவிற்கு தெரியும். ஆகவே இப்பொழுது ஓபிஎஸ்-ஐ தயார் நிலையில் வைத்துக் கொள்ளத்தான் அழைத்து சந்தித்திருக்கிறார் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.

மேலும் மதச்சார்பற்ற கட்சிகள் உதவியோடு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை நிலை நிறுத்தும் வகையில் ஆட்சி அமைக்க பாடுபடுவோம்." என்று தெரிவித்தார்.

`100 பில்லியன் டாலர் டார்கெட்; மேக்இன் இந்தியா; புதிய வர்த்தக வழித்தடங்கள்'- புதின் விசிட் ஹைலைட்ஸ்

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.அவரின் வருகையைத் தொ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" - பவன் கல்யாண் வருத்தம்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார... மேலும் பார்க்க

Indigo: "மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், 'டிசம்பர் 5 மிகக் கடுமையான நாள்' என்று கு... மேலும் பார்க்க